வெள்ளி, 12 நவம்பர், 2010

சிறையில் சீமானை சந்தித்த தமிழ் திரையுலகம்


வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும், திரைப்பட இயக்குநருமான சீமானை, தமிழ் திரைப்படத்துறையினர் சந்தித்துப் பேசினர்.


இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட சீமான், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிறையில் உள்ள சீமானை நடிகர் சத்தியராஜ், இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தரராஜ், விக்ரமன், செல்வபாரதி, அமீர், கௌதமன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். சுமார் ஒரு மணி நேரம் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை அவர்கள் சந்தித்தனர்.

அப்போது பேசிய நடிகர் சத்தியராஜ், நண்பர் மற்றும் இன உணர்வாளர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் சீமானை சந்தித்தோம். சிறையில் சீமான் தைரியமாகவும், ஆரோக்கியமாவும் உள்ளார். இதற்கு முன்பு கோவை மற்றும் மதுரை சிறையில் சீமான் இருந்த போது, நட்பு ரீதியிலும், இன உணர்வாளர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் பார்த்துள்ளோம் என்றார்.

கருத்துகள் இல்லை: