சனி, 13 நவம்பர், 2010

அல் ஜசீரா ஊடகவியலாளர்களுக்கு வீசா அனுமதி வழங்கப்பட்டுள்ளது

அல் ஜசீரா செய்தியாளர்களுக்கு இலங்கை அரசாங்கம் வீசா அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய இவ்வாறு வீசா அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எந்தவிதமான காரணங்களும் குறிப்பிடாது அல் ஜசீரா செய்தி ஊடகவியலாளர்களுக்கு இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கான வீசா முதலில் மறுக்கப்பட்டது.

எனினும், ஜனாதிபதியின் தலையீட்டினால் குறித்த ஊடகவியலாளர்களுக்கு இலங்கை குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் வீசா வழங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை: