சனி, 13 நவம்பர், 2010

புலிகள் தடைசெய்யப்படவேண்டும் என்பதற்கான தமிழ்மக்களின் 20 கட்டளைகள்

teavadai:
1. மிருகத்தின் பெயரில் ஒரு அமைப்பு இருப்பதை தமிழ்மக்கள் விரும்பவில்லை.
2. 35000ற்கு அதிகமான தமிழ்மக்களை புலிகள் இயக்கமே கொன்றிருக்கிறது
3. ராஜீவ்காந்தியை கொன்று இந்தியமக்களிடையே கெட்டபெயர் வாங்கியது
4. பயங்கரவாத நடவடிக்கைகளினால் சர்வதேச அளவில் பலிகளின் பெயர் நாறிப்போனமை
5. புலிகளின் தலைவராக இருந்தவர் பாசிஸ்டுகளின் வரிசையில் சேர்க்கப்பட்டதால்
6. தமிழ்மக்களின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கி பரதேசிகளாக்கியமை
7. சர்வதேச அளிவில் புலிகளின் பெயரால் குட்டி மாபியாக்களை உருவாக்கியமை
8. கொல்வதைத்தவிர வேறு எந்த உருப்படியான கொள்கைகளை அது வைத்திருக்காததால்
9. தமிழ்மக்களுக்கு என இருந்த பெருமைகளை அழித்து சின்னாபின்னமாக்கியமை
10. புலிகளின் சர்வதேச பிரதிநிதிகள் பரோட்டா போடுவதை தவிர வேறு எந்த வழியிலும் வளர்த்தெடுக்காமை
11. புலிகளின் ஆதரவாளர்கள் பலரை கடனாளக்கியமை. (சுவிஸ் நாட்டில் இது அதிகம்)
12. வானொலிகளிலும் தொலைக்காட்சியிலும் துஷசண வீரர்களை நேயர்களாக உருவாக்கியமை
13. போராட்டம் என்கிற பெயரில் ஐரோப்பிய நாட்டு தெருக்களை நாறடித்தமை.
14. ரி.என் ஏ என்கிற முதுகெலும்பற்ற ஒரு கட்சியை தமிழ்மக்களிடையே உருவாக்கியமை
15. சரத்பொன்சேகாவிற்கு தற்கொலைக்குண்டனுப்பிவிட்டு பின்னாடி அவரை ஆதரித்து பிரச்சாரம் செய்தமை.
16. பிரபாகரன் இறந்தபின் தமிழீழத்தை நாடுகடத்தியமை
17. கள்ளமட்டை மோசடிகளில் ஈடுபட்டு இங்கிலாந்தில் தமிழர்களின் மானத்தை கப்பலேற்றியமை
18. தமிழ்மக்களின் பணத்தையும் சொத்துக்களையும் அபகரித்து இறுதியில் இலங்கை அரசுக்கு தாரைவார்த்தது. (முள்ளிவாய்க்காலுக்குப்பின் இராணுவம் கைப்பற்றியவை)
19. மூன்று தலைமுறை இளம் சமூதாயத்தை ;ஆயுதப்போராட்டத்தில் சீரழித்தமை
20. பிச்சை வேணாம் நாயைப்பிடி என்கிற பரிதாப நிலைக்கு தமிழ்மக்களை கொண்டு வந்து சேர்த்தமை
இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. இவை மிக முக்கியமானதென்பதால் குறிப்பிட்டிருக்கிறோம்

கருத்துகள் இல்லை: