ஞாயிறு, 12 ஜூன், 2011

இந்திய சுற்றுலாப் பயணிகளின் தொகையே அதிகம் என இலங்கை

இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டவர்களில் இந்திய சுற்றுலாப் பயணிகளின் தொகையே அதிகம் என இலங்கை சுற்றுலா சபையின் கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இவ்வருடத்தின் முதல் 5 மாதங்களில் மாத்திரம் 68,830 இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளதாகவும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 54.5 சதவீத வளர்ச்சியை இது காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் 5 மாதங்களில் இலங்கை வருகை தந்தவர்களில் பிரித்தானியர்கள் இரண்டாம் இடத்தைப் பெறுகின்றனர். சுமார் 41,474 பிரித்தானியர்கள் குறித்த காலப்பகுதியில் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், பாகிஸ்தானிலிருந்து 6,027 சுற்றுலாப் பயணிகளும் வருகைத் தந்துள்ளனர். கடந்த வருடம் மொத்தமாக 650,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்திருந்தனர். எனினும் அந்த எண்ணிக்கை இவ்வருடம் 100,000ஆக அதிகரிக்கக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: