புதன், 18 செப்டம்பர், 2019

பெரியார் ஒரு அவதாரம் ? ... ஒரு என் ஆர் ஐ பார்ப்பனரின் பார்வையில் !.

இந்த பதிவு ஒரு பூரணமானது அல்ல. .. சில பழைய நினைவுகளை கொஞ்சம் மீட்டி பார்கிறேன் ..
முன்பெல்லாம் என்னை சுற்றி ஏராளமான ஆத்மீக பெரியவர்கள் சூழ்ந்திருந்தார்கள் ..
சதா எப்பொழுதும் அவரை இன்னும் தரிசிக்கவில்லையே இவரை இன்னும் தரிசிக்க வில்லையே என்று சதா எதாவது ஒரு குரு பற்றிய கலந்துரையாடல்கள் என்னை சுற்றி இருந்தன.
அதுமட்டுமல்லாமல் கர்நாடக இசையிலும் கொஞ்சம் பரிச்சயமும் மிகுந்த நாட்டமும் இருந்தது . அந்த கூட்டத்தில் ஒரு நல்ல ரசிகர் எனக்கு நெருங்கிய நண்பராக அறிமுகமானார் .
அவர் பார்பனராக இருந்தாலும் கொஞ்சம் பாரபட்சம் இல்லாமல் தமிழக அரசியலை பற்றி கூறுவார்.
அப்போது எனக்கு கலைஞர் பற்றியோ திமுக பற்றியோ எனக்கு பெரிதாக தெரிந்திருக்கவில்லை ..
அப்போது எனக்கிருந்த சிற்றறிவுக்கு காமராஜாரும் ராஜஜியையும்தான் உசத்தியாக காட்டியது.
அதை முதலில் மாற்றியவர் அசல் பெசன்ட் நகர் பார்ப்பன நண்பர்தான். அவரும் காமராஜர் ராஜாஜியின் ஆதரவாளர்தான்.
ஆனால் அவர் கலைஞர் பற்றி கூறிய தகவல்கள் எனக்கு அப்போது பெரும் ஆச்சரியமானவை. ஏனெனில் இலங்கை பத்திரிகைகள் திமுகவையும் கலைஞரையும் இருட்டடிப்பு செய்திருந்தன.
தமிழகம் என்றால் காஞ்சி பெரியவாள் காமராஜ் ராஜாஜி எம் எஸ் சுப்புலட்சிமி என்பது மட்டுமே என்று காட்டி எம்மை உருவாக்கியிருந்தன இலங்கை பத்திரிகைகள் .

தமிழகத்தின் அந்த பிம்பத்தை உடைத்தவர் கும்பகோணத்தை பூர்வீகமாக கொண்ட பெசன்ட் நகர் நண்பர்தான் . முனைவர் பட்டம் பெற அந்நிய தேசம் வந்தவர் . அவரை காலம் எனக்கு அனுப்பியிருந்தது.
அவரின் குடும்ப உறவினர்கள் தமிழக அரசியலும் ஊடகங்களிலும் உயர்ந்த பொறுப்பில் இருந்தவர்கள் ..
கலைஞர் பற்றியும் திமுக பற்றியும் அவர் கூறிய பல செய்திகள் என்னை புரட்டி போட்டுவிட்டது.
அதுவரை நான் அறிந்தது எல்லாம் ஒன்றுமே இல்லை என்று புரிந்துகொண்டேன்.
சார் ..கலைஞர் பதவில இருந்தா எல்லாருக்கும் தூக்கம் போயிடும் ..
மனுஷன் தூங்க மாட்டார் சார் .. நேரம் காலம் தெரியாம கூப்பிடுவார். . சார் என்ன பண்றீங்க அந்த பைல கொஞ்சம் பாக்கணுமே அப்படி சிம்பிள பெரிய பெரிய பைல் எல்லாம் கேப்பாரு ..
ஐ ஏ எஸ் காரங்க எல்லாம் சாப்பிட கூட நேரமில்லாம ஓடுவாங்க .. ரொம்ப பெர்பெக்ட் சார். அப்படி ஒரு சி எம் ஐ பாக்கவே முடியாது .. ரொம்ப ஏபிசென்ட் .. பெரிய கெட்டிக்காரர் ..
இந்த காங்கிரஸ்காரங்க எம்ஜியாரை மிரட்டி பிரிச்சு விட்டுடாங்க .. திமுக உடையாம இருந்திருந்தா என்னும் எவ்வளவோ செஞ்சிருப்பார் .. இவனுக பண்ணின வேல..
எம்ஜியாருக்கு என்ன தெரியும்? அவரை சுத்தி பூரா ரசிகர் மன்றங்க ..
பெரியார் பற்றி கூட எனக்கு அப்போது பெரிதாக தெரியாது .. அவர் கடவுள் இல்லைங்கிறார் என்பது மட்டுமே தெரிந்திருந்தது.
ஒரு வார விடுமுறையில் ஒரு சில பியர்களுக்கு பின்பாக அவர் திடீரென்று பெரியாரை பற்றி கூற தொடங்கினர் .
அவர் ஈவேரா என்று உச்சரிக்கவில்லை .. பெரியார் என்றே ஒவ்வொரு தடவையும் குறிப்பிட்டார் .
பெரியார் உண்மையிலேயே பெரிய ஆள்தான் .. பயப்பிடவே மாட்டாரு.
நினச்சதை செய்ஞ்சே தீருவாரு.. அவரு வாய திறந்தாலே ஹிந்திக்கரனுக்கு புரிஞ்சிடும் .. இவரு நொருக்கிடுவாறு ..
அவரு பேசின ஒவ்வொண்ணும் ஒவ்வொரு டைனமைட் மாதிரிதான் .
சுயநலம் துளிகூட இல்லாத மனிஷன் ..
சாமி இல்லைன்கிறார் ..சரி ஏதோ சொல்றார் ஆனா அவரு மாதிரி யோசிக்கிறதுக்கு இந்தியாவிலேயே ஒருத்தரும் இல்லசார் ..
அவரு பெரிசா ஒண்ணும் படிக்கல .. ஆனால் அவரு எதையும் மிச்சம் வைக்கலையே.. எல்லதத்தை பத்தியும் பேசி இருக்கார் . யாரும் யோசிக்காத அளவுக்கு யோசிச்ச ஒரு கிரேட் மென் சார்.
எனக்கென்னவோ அவர் ஒரு அவதாரம் மாதிரில்லா இருகாரு ...
ஒரு படிக்காத மனிஷன் எப்படி எப்படி எல்லாமோ சிந்திச்சு யார் யாரை எல்லோம் தேடி பிடிச்சு தமிழ் நாட்டை அப்படியே திருப்பி போட்டுட்டரே..
நோர்த்தில போய் பார்த்தா தெரியும் அவனுக வெறும் மண்டுகங்க ..
சும்மா தின்னு தின்னுக்கிட்டு சோம்பேறிங்க .. படிப்பு ரொம்ப கம்மி
நெறைய பேருக்கு ஒரு எழவும் தெரியாது ..
பெரியார் ரொம்ப துவேசமா பேசுறார் ஆனா அது அவரோட ஏதோவொரு மிஷன் மாதிரித்தான் தெரியறது .
நம்ம ஆளுங்களுக்கு அவரை பிடிக்கல்ல .... நம்ம ஆளுங்களுக்கு (பார்பனர்களுக்கு) பிடிச்சவங்க பூரா களவாணிங்க .
இவனுகள பாக்கிறப்போ நமக்கே தோணும் பெரியார்தான் சரி ..
பூரா திருட்டு பசங்க .. பொம்பள பொறுக்கிங்க ..
ஜனங்களை பத்தி ஒரு கவலையும் இல்லாதவங்க ..
இவனுகளோட கொட்டத்த அடக்கினது பெரியார்தான் ..
நான் நினைக்கிறேன் .. இவங்க அக்கிராமத்த பாத்து வெறுத்து போய்தான் பெரியாரை கடவுள் அனுபியிருகார் .. அவர் ஒரு அவதாரம் சார் ..
இதை கூறி முடிக்கும் போது அவர் கண் கலங்கி இருந்தார் .
அவர் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டவர்..  ராதா மனோகர்.

2 கருத்துகள்:

Murali சொன்னது…

மிக அற்புதம் சார்.

Radha manohar சொன்னது…

மிகவும் நன்றி சார்