திங்கள், 16 செப்டம்பர், 2019

பள்ளிகளுக்கு காலாண்டுத் தேர்வு விடுமுறை ரத்து.. பின் வாங்கிய எடப்பாடி அரசு\!

பள்ளிகளுக்கு காலாண்டுத் தேர்வு விடுமுறை ரத்து!பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறையில் காந்தி சிந்தனை வகுப்புக்கள்  (என்ற போர்வையில் ஆர் எஸ் எஸ் வகுப்புக்கள்)   நடத்தப்படும் என்று தமிழக அரசு மக்களின் கடும் எதிர்ப்பால் அந்த உத்தரவை மீளப்பெற்றுள்ளது .. மழைக்கு கூட பள்ளிக்கூடம் ஒதுங்காத எடப்பாடி கும்பலின்  பாஜக / பார்ப்பன / இந்துத்வா  பாசம் ..
ம்ன்னம்பலம் : தமிழகத்தில் அனைத்துப்
பள்ளிகளிலும் காலாண்டு விடுமுறை ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்கு பதிலாக அந்த நாட்களில் காந்தியின் 150 ஆவது பிறந்தாளை முன்னிட்டு காந்திய சிந்தனைகள் பற்றி வகுப்பெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், “ காந்தியடிகளின் 150 ஆவது பிறந்தநாள் விழா 2.10.2018 முதல் 2.10.2020 வரை இரண்டு ஆண்டுகளுக்கு கொண்டாடப்பட்டு வருவதால், இதை சீரிய முறையில் செயல்படுத்திட மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

அதன்படி வரும் 23-9-19 முதல் 2-10-2019 முடிய தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் காந்திய மதிப்புகளைச் சார்ந்து மாணவர்களுக்கு காந்திய சிந்தனை வகுப்புகள் எடுக்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
சர்வ மதப் பிரார்த்தனை, தூய்மை விழிப்புணர்வு, காந்திய கதைகள் கூறுதல், காந்தியடிகள் பற்றி கலந்துரையாடுதல், காந்தியோடு தொடர்புடைய இடங்களுக்கு மாணவர்களைக் கூட்டிச் செல்லுதல், காந்திய வினாடி வினா போட்டிகள் நடத்துதல் உள்ளிட காந்தி தொடர்பான நிகழ்வுகளை மாணவர்களை மையமாக வைத்து நடத்தும்படி சுற்றறிக்கைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் காலாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுவிட்டது என்று ஆசிரியர்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலரிடம் பேசியபோது, “இப்படி ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாக இன்றுதான் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதுபற்றி எங்கள் உயரதிகாரிகளைத் தொடர்புகொண்டு கேட்டபோது வகுப்புகள் நடத்த விரும்பும் பள்ளிகள் நடத்தலாம், இல்லையென்றால் காலாண்டு தேர்வு விடுமுறை விடலாம் என்று பட்டும் படாமலும் சொல்கிறார்கள்.
இந்த ஒன்பது நாட்களும் காந்திய வகுப்புகளை நடத்துவது பற்றி யாருக்கும் ஆட்சேபணை இல்லை. ஆனால் காலாண்டு தேர்வு விடைத் தாள்களை எப்போது திருத்துவது, அது தொடர்பான ரெக்கார்டு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது எப்படி என்று குழப்பமாக இருக்கிறது” என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: