வெள்ளி, 20 செப்டம்பர், 2019

உதித் சூர்யா விஷயத்தில் நீட்டே முதல் குற்றவாளி ... அனிதாவை அரசு ஏமாற்றியது ! உதித் அரசை ஏமாற்றினார்!

Devi Somasundaram : சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா ..அப்பா வெங்கடேசன் ஸ்டான்லி மெடிக்கல் காலேஜ்ல டாக்டர் .
உதித் நல்லாப் படிக்கின்ற மாணவர் என்று ஒரு தரப்பு சொல்கிறது ( +2 ல 1107 மார்க் என்கிறார் அவர் நண்பர் ) .
சென்னைல கோச்சிங எடுத்து முதல் நீட் அட்டெம்ப்ட்ல தோல்வி ..மருத்துவ படிப்பு உதித்க்கு கனவுப் படிப்பு..அதனால் செலவு செய்து ரஷ்யாவில் மருத்துவம் படிக்கச் சென்றிருக்கிறார் .
மொழிப் பிரச்சனை, ஊர் ஒத்துக் கொள்ளாமையால் டிஸ்கண்டினியு செய்து இந்தியா வந்திருக்கிறார் .
மீண்டும் நீட் எழுதி மீண்டும் பெயில். மருத்துவப் படிப்பின் மீது இருந்தக் காதலால் விடாமல் முயல
மூன்றாம் முறை பாம்பேயில் கோச்சிங எடுத்துள்ளார் .
அங்கு தான் தேர்வும் எழுதி இருக்கின்றார் .அதில் தான் ஆள்மாறாட்டம் என்பது செய்தி .
அனிதாவுக்கு நடந்தது தான் உதித்துக்கும் நடந்துள்ளது .
இருவருக்கும் மருத்துவம் படிப்பது ஆவல் .
இருவரும் நல்ல மார்க் எடுத்துள்ளனர் .
அனிதா கோர்ட் வரை சென்று நேர்மையாத் தன் உரிமைகாக போராடினார் .. அரசு அவளை ஏமாற்றியது .
உதித் அரசை ஏமாற்றியுள்ளார் ..
அனிதாவுக்கு நீட் என்பதே ஆள்மாறாட்டம் தான் ..அனிதாப் படித்த கல்விக்கு சம்பந்தமில்லாத தேர்வு அவர் வரை அரசு செய்த ஆள் மாறாட்டம் .
உதித் அதையே அரசுக்கு திருப்பி செய்துள்ளார் .
அனிதாவுக்கு அவர் எழுதிய தேர்வு சம்பந்தமில்லாதது .
உதித் விவகாரத்தில் தேர்வு எழுதியவர் சம்பந்தமில்லாதவர்
உதித் அவர் +2 மார்க் அடிப்படையில் ஈஸியா சீட் கிடைத்திருக்கும் ..நீட் அவர் மீது திணிக்கபட்டதால் அவர் குற்றவாளி ஆக்கப்பட்டார் .
அனிதா அப்பாவி தற்கொலை செய்து கொண்டார்..உதித் அரசை கொலை செய்திருக்கிறார் .

இரண்டுமே மறுக்கப்பட்ட சமுக நீதியின் வெளிபாடு தான்.
அனிதா விஷயத்தில் அவரே இறந்து விட்டதால் அதை நாம் சுலபமா கடந்து விடுகிறோம்.அது நாம் செய்த கொலை தான் என்பதை நாம் வசதியாக மறந்து விடுகிறோம் .
உதித் நம்மையே குத்தியால் அது குற்றம் என்று குதிக்கிறோம் .
உதித் குற்றவாளி என்றால் அரசு குற்றவாளி இல்லையா ? .
உதித் சட்டத்தை ஏமாற்றிய குற்றவாளி.
அனிதா சட்டத்தால் ஏமாற்றப் பட்ட அப்பாவி .
மறுக்கப் படும் சமுக நீதி ஊழலை உருவாக்கும் . உதித்க்கு மறுக்கப் பட்ட கல்வி அவரை தவறு செய்யும் வரை தூண்டி இருக்கு .
அனிதாவை தற்கொலை செய்து கொள்ள தூண்டி இருக்கு .
குற்றத்தை விட குற்றம் செய்ய தூண்டியவரே முதல் குற்றவாளி என்கிறது சட்டம்.. உதித் விஷயத்தில் நீட்டே முதல் குற்றவாளி .
சென்னையில் தேர்வெழுதிய மாணவர்கள் உள்ளாடை வரை கிழித்து சோதனை செய்யப் பட்டது ..மும்பையில் ஆள்மாறாட்டம் செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளது .
ஆள் மாறாட்டம் செய்த கோச்சிங்செண்டர் மூடப் படுமா ? . ஆள் மாறாட்டம் செய்ய கோச்சிங்செண்டர் உரிமையாளர் மேல் வழக்கு தொடுக்கப் படுமா ? ..

1 கருத்து:

குமரிநாடன் சொன்னது…

உங்கள் கருத்துக்கள் நூறு விழுக்காடும் சரி. தமிழர்கள் குறைந்த பட்சம் ஏழு எட்டு விழுக்காடு இந்தக் கோணத்தில் சிந்தித்தாலே தீர்வு கிடைத்து விடும். மீதி 82 விழுக்காடு பற்றி கவலையில்லை. இந்திய விடுதலைக்குக் கூட ஏழு எட்டு விழுக்காட்டினர்தாம் போராடினார்களாமே.