செவ்வாய், 17 செப்டம்பர், 2019

கணவன் விவசாயம் செய்வதால் மனைவி தற்கொலை .. அவமானமாம் ...கணவர் எஞ்சினியர்...

ஏங்க.. மானம் போகுது.. இந்த வேலையை செய்யாதீங்க.. கோபத்தில் இளம் மனைவி தூக்கிட்டு தற்கொலை  
Hemavandhana- tamil.oneindia.com ; விருதுநகர்: தனக்கு பிடிச்ச மாதிரி கணவன் வேலை செய்யவில்லை என்று மனைவி தற்கொலையே செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
தளவாய்புரம் பகுதியை சேர்ந்தவர் பெரிய மாடசாமி. இவரது மனைவி ஸ்டெல்லாமேரி. வயது 25! இவர்களுக்கு 4 வருஷத்துக்கு முன்பு கல்யாணம் ஆகி ஒரு மகன் இருக்கிறான். மாடசாமி ஒரு என்ஜினீயர். ஆனால் செய்யும் தொழிலோ விவசாயம். சொந்தமாக நிலம் இருக்கவும்,
மாடசாமி வேற வேலைக்கு போக விருப்பம் இல்லை என்றார்.
இது ஸ்டெல்லாமேரிக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. விவசாயம் செய்வதை அவமானமாகவே பார்க்க ஆரம்பித்துவிட்டார்.
விவசாயத்தை தூக்கி போட்டுட்டு, ஏதாவது கவர்ன்மென்ட் வேலைக்கோ, அல்லது வெளிநாட்டுக்கோ போகுமாறு சொல்லி கொண்டே வந்துள்ளார்.
ஆனால் மாடசாமியோ, விவசாயத்தை விடவே இல்லை. இது தம்பதிக்குள் பெரிய பிரச்னையாகவே வெடித்து வந்தது. சம்பவத்தன்றும், தம்பதிக்குள் இது சம்பந்தமாக சண்டை வந்தது. "விவசாயம் செய்வதால் என் மானமே போகுது, வேற வேலைக்கு தயவுசெய்து போங்க" என்று சண்டை போட்டார் ஸ்டெல்லா மேரி. தற்கொலை இதையடுத்து குடும்பத்தினர் 2 பேரையும் சமாதானம் செய்ததையடுத்து, மாடசாமி வயல்காட்டிற்கு சென்று விட்டார். வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஸ்டெல்லாமேரி தூக்குப்போட்டு கொண்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தார். அதிர்ச்சி அதிர்ச்சி இதுகுறித்து சேத்தூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள். நாட்டின் முதுகெலும்பாக கருப்படும் விவசாயத்தை அவமானமாக எண்ணியதுடன், இதற்காக உயிரையே ஒரு பெண் மாய்த்துக் கொண்ட சம்பவ பெரிய அதிர்ச்சியை தநதுள்ளது.

கருத்துகள் இல்லை: