வெள்ளி, 2 நவம்பர், 2018

நிர்மலாதேவி - ஆளுநர் விவகாரத்தில் .. முருகன் பலிக்கடா? அந்த 50 பேர் பட்டியலை - முருகன் பரபரப்பு பேச்சு

நிர்மலாதேவி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 50 பேர் பட்டியலை
வெளியிடுவேன் - முருகன் பரபரப்பு பேச்சு!
பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக கட்டாயப்படுத்திய விவகாரத்தில் சிபிசிஐடி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் குறித்து அந்த வாக்குமூலத்தில் தெரிவித்ததாக வெளிவந்த தகவலையடுத்து, அதை முருகன் மறுத்துள்ளார். நிர்மலா தேவியை மிரட்டி சிபிசிஐடி போலீஸார் பொய்யான வாக்குமூலம் பெற்றதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் உதவிப் பேராசிரியர் முருகன். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 50 பேருக்கும் மேலான பட்டியலை ஆதாரத்தோடு வெளியிடுவேன் எனவும் தெரிவித்துள்ளார் முருகன். .. தேவராஜ் .

கருத்துகள் இல்லை: