புதன், 31 அக்டோபர், 2018

ரணில் மீண்டும் பிரதமரானால் நான் 2 மணித்தியாலங்கள் கூட ஜனாதிபதி பதவியில் இருக்க மாட்டேன்

ரணில் மைத்திரியை ஜனாதிபதியாக்கிய பொழுது
Ajeevan Veer : ரணில் மீண்டும் பிரதமரானால் நான் 2 மணித்தியாலங்கள் கூட ஜனாதிபதி பதவியில் இருக்க மாட்டேன். பதவி துறப்பேன் - மைத்ரி
இன்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த ஶ்ரீலங்கா சட்சியினரிடம் " ரணில் மீண்டும் பிரதமரானால் நான் 2 மணித்தியாலங்கள் கூட ஜனாதிபதி பதவியில் இருக்க மாட்டேன். பதவி துறப்பேன்
எனத் தெரிவித்துள்ளார்.
இன்று நடந்த ஒன்று கூடலுக்கு ஶ்ரீலங்கா சுதந்தரக் கட்சியைச் சேர்ந்த துமிந்த உட்பட 11 பேர் சமூகமளிக்கவில்லை.
இவ்வேளையில் ரணிலை பிரதமராக்க அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றியம் உட்பட மேற்கத்திய நாடுகள் தனக்கு எதிராக சதி செய்வதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலையில் 5 பேர் மைத்ரி - மகிந்த தரப்போடு இணைந்துள்ளார்கள். கட்சியிலுள்ள 11 பேர் சுயாதீனமாகியுள்ளார்கள். அதனால் 113 பேரை பெறுவதற்கு 96லிருந்து அல்ல 85லிருந்து தொடங்க வேண்டிய நிலைக்கு மைத்ரி தள்ளப்பட்டுள்ளார். 100 கோடி கொடுத்தாலும் 28 பேரை இறக்க முடியுமா என்பதே மைத்ரியின் தலை வெடிக்கும் பிரச்சனையாக உள்ளதாம்.

கருத்துகள் இல்லை: