வியாழன், 21 டிசம்பர், 2017

2ஜி தீர்ப்பு பார்ப்பனிய ஆட்களிடம் ஏன் பதற்றத்தை ஏற்படுத்துகிறது?


Sivasankaran Saravanan : நிகழ்தகவு 1 : இதில் ஊழல் என்பதே இல்லை என்பது நிரூபணமாகிவிட்டது. இனி பார்ப்பனிய லாபி எதிர்காலத்தில் யார் மீதாவது ஊழல் இமேஜை ஏற்படுத்த முயன்றால் அதை எளிதில் நம்பமாட்டார்கள். டிடிவி தினகரன் மீது ரெய்டு விட்டபோது அதை ரசிக்காமல் பாஜகவை பார்த்து பலர் கேள்வி கேட்டது சமீபத்திய ஒரு உதாரணம்.
நிகழ்தகவு 2: இல்லை ஊழல் நடந்திருக்கலாம். ஆனால் பாஜக, திமுகவிற்கு சாதகமாக தீர்ப்பு வரவைத்துவிட்டது. அப்படியென்றால் இதில் திமுக Upper hand. திமுகவோடு கூட்டணி வைப்பதற்காக இந்தளவுக்கு பாஜக திமுக காலில் போய் விழுமென்றால், த்தா திமுக என்ன அவ்ளோ பவர் புல் லான கட்சியா? நாட்டின் 19 மாநிலங்களில் ஆட்சி செய்கிற பாஜக, அதிலும் காங்கிரசை எழுந்திருக்க விடாமல் அடிக்கும் மோடி+ அமித் ஷா இணை திமுக காலில் விழுகிறது என்றால் அந்தளவுக்கு திமுக ராட்சச பலத்துடன் இருக்கிறது. முதல் விஷயத்தை விட இரண்டாவது தான் அவர்களை ரொம்பவே பயமுறுத்துகிறது.

கருத்துகள் இல்லை: