வியாழன், 21 டிசம்பர், 2017

2ஜி வழக்கில் ஆதாரத்திற்காக 7 வருடமாக காத்திருந்தேன்: நீதிபதி சைனி

கலைஞர் தன் கைப்பட எழுதி கையெழுத்திட்ட கருத்து 
தினமலர் :புதுடில்லி: 2ஜி வழக்கில் யாராவது ஏற்று கொள்ளப்படக்கூடிய சாட்சியோடு வருவார்கள் என காத்திருந்ததாக டில்லி சிபிஐ சிறப்பு கோர்ட் நீதிபதி சைனி கூறியுள்ளார்.
2ஜி வழக்கில் 1,500 பக்க தீர்ப்பு வழங்கிய நீதிபதி சைனி கூறியதாவது: கடந்த 7 வருடங்களாக, அனைத்து பணி நாட்கள், கோடை விடுமுறை நாட்களில் கோர்ட் அறையில் காலை 10 மணி முதல் மாலை 5மணி வரையில் பொறுமையாக காத்திருந்தேன். வழக்கில் யாராவது ஒருவராவது கோர்ட்டால் ஏற்று கொள்ளப்பட கூடிய ஒரு சாட்சியோடு வருவார்கள் என்று... ஆனால், எதுவும் நடக்கவில்லை. இந்த வழக்கு விசாரணையில் முதலில் ஆர்வமாக துவங்கிய அரசு தரப்பு வாதமானது நாளடைவில் மிகுந்த எச்சரிக்கை உணர்வு கொண்டதாகவும், எதை செய்ய வேண்டும் என்ற நிலையிலும் மாற்றம் உண்டானது. கொஞ்சம் கொஞ்சமாக சீர்குலைந்த வாதத்தின் தரமானது ஒரு காலகட்டத்தில் இலக்கற்ற ஒன்றாக மாறிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: