சனி, 2 செப்டம்பர், 2017

மாபா பாண்டியராஜன் ! ஜெயலலிதா அப்போலோவில் இருந்த நேரம் பார்த்து நீட் கையெழுத்து போட்டவன் இவன்!

காங்கிரஸ் தான் நீட் தேர்வை கொண்டு வந்ததுன்னு சொல்லும் அறிவாளிகளுக்காக.. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு முறையில், மாநிலங்கள் விரும்பினால் விலக்கு அளிக்கப்பட்டது.. ஆனால், மோடி பிஜேபி ஆட்சியில் அதை திருத்தி கட்டாயம் என மாற்றினார்கள்.. அப்படி இருந்தும், மத்திய மெடிகல் கவுன்சிலில் சேரவில்லையெனில், இப்போதும் நீட் கட்டாயம் கிடையாது.. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இப்போதும் நீட் தேர்வு கிடையாது.. இங்கே தமிழ்நாட்டில், திமுக ஆட்சி இருந்தவரை, பின்பு ஜெயா இருந்தவரை, கட்டாய நீட் முறைக்கு கையெழுத்து போடவில்லை.. அவர் அப்பலோவில் அட்மிட் ஆகியவுடன், பிஜேபியின் பினாமி ஓபிஎஸ்  அப்போது அமைச்சராக இருந்த பிஜேபியின் ஒற்றன் மாபா பாண்டியராஜன் இருவரும் சேர்ந்து தமிழ் நாட்டை மத்திய பிஜேபி அரசிடம் அடகு வைத்து கையெழுத்து போட்டார்கள்.. சும்மா, ஒன்னும் தெரியாமல் அரசியல் பேசக்கூடாது.. Via: Prakash JP

கருத்துகள் இல்லை: