வியாழன், 31 ஆகஸ்ட், 2017

கோயிலை வைத்து பிழைக்கும் எந்த பார்ப்பான் ஆவது முள்குத்தி கொண்டு உலா வருகிறானா?

பாசறை செல்வராஜ் : கடந்த 10/15 வருடங்களா நேர்த்திக்கடன் செய்கிறோம் என்ற பெயரில் முதுகில் துடையில் கம்பியை குத்தி கயிற்றில் தொங்குகிறார்கள் இந்த செயல்கள் நீக்கமற எல்லா கிராமங்களிலும் அதுவும் குறிப்பா வன்னியர் ஆதிதிராவிடர் இளைஞர்கள் இது கடவுள் பிராத்தனை என்ற அளவில் செய்கிறார்கள் இதன் வலி என்னவென்று பத்து ஆண்டுகள் கழித்து பார்த்தால் அதன் வலி தெரியும் நன்பர்களே
இதில் எனக்கு சில கேள்விகள் உண்டு முகநூலில் இது போன்ற பிராத்தனை நன்பர்கள் பதில் சொல்லலாம்
கோயிலையே மூலதனமா வைத்து பிழைப்பு நடத்துகிற பாப்பான் எங்கேயாவது இப்படி முள்குத்திக்கொண்டு தொங்குகிறானா?
பாப்பான் வீட்டு சாமி மட்டும் வடை பாயாசம் கேக்குது!
எந்த பாப்பானாவது அம்மனை ஜோடித்து வீதிதோறும் தூக்கிச் செல்கிறானா?
பாப்பான் வீட்டு சாமி கள் சாராயம் குடிக்க மறுக்குது !
இதையெல்லாம் இந்த காலத்து இளைஞர்கள் மாணவர்கள் கொஞ்சம் சிந்தித்து பாருங்க தம்பிகளா!


எங்க ஊர் பக்கத்தில் சிங்காடிவாக்கம் என்ற ஊர் அங்க முதலியார் குடும்பங்கள் பத்து ஆதிதிராவிட குடும்பங்கள் 70/80இருக்கும் கடந்த 30வருடங்களுக்கு முன்
தைமாதம் நெல்லு கொஞ்சம் கூடுதலா விளைந்திருக்கு,

முதலியார் இரண்டாவது போகம் பயிர் செய்ய வேளைக்கு ஆள் கூப்பிடப்போறார் வேளைக்கு ஆள் வரவில்லை .
இரவு முதலியார்கள் ஊர் கூட்டம் போட்டு புறாகாப்பு கட்ட ஏற்பாடு செய்கிறார்கள்.
 புறா காப்பு என்றால் 8நாள் திருவிழா.
காப்புகட்டி எட்டுநாள் திருவிழா முடிந்துவிட்டது.
 மீண்டும் வேலைக்கு ஆள் கூப்பிடப்போறார்கள் .
வேலைக்கு நான் நீ என்று போட்டிப் போடுகிறார்கள் .
காரணம் வீட்டில் இருந்த நெல்லு மற்றும் பொருளாதாரம் மொத்தம் முடிந்து விட்டது .
அந்த பொருளாதாரத்தை அழிப்பதுதான் திருவிழாவின் நோக்கம் .
நாம் புரிந்து கொள்ளவேண்டும் .
அதற்க்காக விழாக்கள் இல்லாமல் இருக்கக்கூடாது .

அவசியமானவற்றை செய்வது நல்லது .பொருளாதார சிக்கனம் தேவை அதுவே நமது வாழ்க்கைக்கு உதவும்

கருத்துகள் இல்லை: