வெள்ளி, 9 டிசம்பர், 2016

மதிமாறன் :விமர்சனங்களை மறைத்து மறைந்தவர்களை பற்றி பேசுவது என் மனசாட்சிக்கு ....

மெல்லிசை மன்னர், ஆச்சி மனோரமா காலமானபோது புதியதலைமுறை தொலைக்காட்சி நேரலையில் கலந்துகொண்டேன். திரை, அரசியல், இசை பிரமுகர்களை விட நான்தான் அதிக நேரம் ஏறக்குறைய முழுமையாகவே இருந்தேன். அவர்களின் கலை சிறப்புகளை என் கண்ணோட்டத்தில் பகிர்ந்து கொண்டேன். அதை நான் மிக விரும்பி செய்தேன்.
அப்துல் கலாம் அவர்கள் மரணத்தின் போதும், நா. முத்துக்குமார் இறந்தபோதும், இன்று முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணத்தின்போதும் புதியதலைமுறை தொலைக்காட்சியினர் என்னை நேரலைக்கு அழைத்தார்கள்.
பொதுவாகத் திரைப்படப் பாடல் வரிகள் மீது எனக்கு ஈடுபாடு கிடையாது என்பதால்,
முத்துக்குமார் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்ற காரணத்தால் நான் கலந்து கொள்ளவில்லை.
முன்னாள் ஜனாதிபதி திரு. அப்துல் கலாம், இன்று முதல்வரின் மரணத்தின் நேரலையின் போதும் நான் கலந்து கொள்வதைத் தவிர்த்து விட்டேன். காரணம் இருவர் குறித்தும் எனக்கு மிக அதிகமான விமர்சனங்கள் இருப்பதுதான்.

அப்படி அதிக விமர்சனங்கள் இருப்பதை முற்றிலுமாக மறைத்துச் செயற்கையாக பேசிக் கொண்டிருப்பது, இறந்தவர்களை அவமானப்படுத்துவதாக இருக்கும் என்ற எண்ணத்தால் நான் கலந்து கொள்ளவில்லை.
என் மனசாட்சிபடி அவர்கள் இருவரின் மரணத்திற்கும் நான் செய்த மரியாதையாகக் கருதுகிறேன்.
2
எவ்வளவு திறமையான கொள்ளைக்காரர்களும் பங்கு பிரிக்கும்போது கண்டிப்பா சண்டை போட்டுப்பாங்க. ஒருத்தரை ஒருத்தர் காட்டியும் கொடுத்துப்பாங்க.
கோஸ்டி மோதலில் கண்டிப்பா எல்லா மர்மங்களும் வெளியே வரும். /விரைவில்/

கருத்துகள் இல்லை: