வெள்ளி, 9 டிசம்பர், 2016

முதல்வர் ஜெயலலிதா சிலருக்கு கடவுள் ? சிலருக்கு மன்னிக்கவே முடியாத குற்றவாளி?

பாலு ஜுவல்லர்ஸை அழித்தது, கங்கை அமரனின் பையனூர் பண்ணை  வீட்டை ஆட்டைய போட்டது, நாட்டாமை படத்தை பார்க்க வேண்டும் என்று கூறி வாங்கிய ஃபிலிமை ரிலீஸான இரண்டாவது நாளே ஜெயா டிவியில் ( அப்போது ஜெ.ஜெ டிவி) போட்டது, டான்சி கேஸில் ஆஜரான சன்முகசந்தரத்தை வெட்டியது, பரிதி இளம்வழுதியை ஜான்
பாண்டியனைவிட்டு ஓட ஓட விரட்டியது, சுதாகரனின் ஆடம்பர கல்யாணம் பின் அவர் மீதே கஞ்சா கேஸ் போட்டது, சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு பின் அதையே ஓரு கலாச்சாரமாக மாற்றியது..பாலன் என்ற பினாமியை உயிரோட வைத்து கொளுத்தியது..
ஆடிட்டரை வீட்டுக்குள் கூட்டிவந்து துவம்சம் செய்தது.. தன் கையெழுத்தை தானே போடவில்லை என்று மறுத்தது, ஒரே கையெழுத்தில் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி ESMA, TESMA சட்டம் போட்டது, கலைஞரை நள்ளிரவு கைது செய்தது, அதற்கு எதிராக நடந்த அமைதி பேரணியில் வன்முறை வெறியாட்டம் போட்டது, அந்த வன்முறைக்கு துணைபோன மீனவ சமுதாயத்தை சேர்ந்த வீரமணியை வளர்த்துவிட்டது பின் காரியம் முடிந்ததும் என்கவுன்ட்டரில் போட்டுத்தள்ளியது..பால் விலை பஸ் டிக்கெட் விலை ஏற்றம், தன் ஈகோவால் கட்டிய சட்டமன்றத்தை பூட்டியது பின் எதிர்ப்பின் காரணமாக அதை மருத்துவமனையாக மாற்றியது, அண்ணா நூலகத்தை சீறழித்தது...

எதிர்த்தவர் மேல் எல்லாம் வழக்கு தொடர்ந்தது, தனிப்பட்ட முறையில் என் தந்தை எதிர்க்க துணிவில்லாமல் அரசு மருத்துவரான என் தாயை குப்பை கிடங்கில் பணியமர்த்தியதோடு மட்டுமல்லாமல் பணிஓய்வு பெற 1 நாள் இருந்த சமயத்தில் பணி இடை நீக்கம்(எந்த காரணமும் இன்றி) செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியது போன்ற சைகோ தனங்களையே தன் ஆட்சி நிர்வாகமாக மாற்றிய ஜெயாவை எப்படி என்னால் ஒரு சிறந்த முதல் அமைச்சராக இரும்பு பெண்மணியாக ஏற்றுக்கொள்ள முடியும்??
பி.கு: இதெல்லாம் அவர் தனிப்பட்ட காழ்ப்புகளால் செய்த ஒன்று.. ஆட்சி நிர்வாகத்தின் கேலி கூத்துக்களை சொன்னால் ஒரு நாள் போதாது...
By சாய் லட்சுமிகாந்த். முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: