சனி, 10 டிசம்பர், 2016

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு திட்டம்

நெகிழி (பிளாஸ்டிக்) ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான மூலப் பொருள்களை கொள்முதல் செய்வதைத் தொடங்கி விட்டதாகவும் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, ""தாள் ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, நெகிழி ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதா?'' என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்து மத்திய நிதித் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், ""பிளாஸ்டிக் அல்லது பாலிமர் மூலப் பொருள்களின் உதவியுடன் நெகிழி ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது; அதற்கான கொள்முதல் தொடங்கிவிட்டது'' என்று தெரிவித்தார்.

நெகிழி ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது குறித்து ரிசர்வ் வங்கி நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. ரூ.10 மதிப்புடைய 100 கோடி நெகிழி ரூபாய் நோட்டுகளை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான கள ஆய்வை மேற்கொள்வதற்காக கொச்சி, மைசூரு, ஜெய்ப்பூர், சிம்லா, புவனேசுவரம் ஆகிய ஐந்து நகரங்க dinamani.com

கருத்துகள் இல்லை: