வெள்ளி, 9 டிசம்பர், 2016

நீட் தேர்வை தமிழ் மொழியிலும் எழுதலாம்: மத்திய அரசு அறிவிப்பு ..

புதுடெல்லி: அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் உள்ள இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள் அகில இந்திய மருத்துவ, பல் மருத்துவ நுழைவுத் தேர்வை (நீட்) எழுத வேண்டும். தனியார் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளிலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இத்தேர்வை எழுத வேண்டும். இந்நிலையில் நீட் மருத்துவ பொதுநுழைவுத்தேர்வை தமிழிலும் எழுதலாம் என்று மக்களவையில் சுகாதாரத்துறை இணை மந்திரி அனுப்பிரியா பட்டேல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: 2017-ல் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தமிழில் நடத்தப்படும். மேலும் அசாமி, குஜராத்தி, தெலுங்கு, பெங்காலி மொழிகளிலும் நீட் தேர்வை எழுதலாம். ஆங்கிலம், ஹிந்தி தவிர்த்து பிற மாநில மொழிகளிலும் நீட் தேர்வு நடத்தப்படும். மேலும் மருத்துவ இளம், முதுகலை படிப்புகளுக்கான இடஒதுக்கீட்டை மாநில அரசு முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்  மாலைமலர்.காம்

கருத்துகள் இல்லை: