சனி, 24 செப்டம்பர், 2016

காவேரி 380 டி எம் சி யை 192 வரை குறைத்ததில் நாரிமன் பங்கு ... இவர்தான் ஜெயாவுக்கு ஜாமீன் வாங்கி கொடுத்தவர்

ஒரு கட்டத்தில், ஆண்டுக்கு 380 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு தர
வேண்டிய நிலையில் இருந்த கர்நாடகா தற்போது 192 டிஎம்சி கொடுத்தால் போதும் என்ற நிலைக்கு வருவதற்கு நாரிமன் டீமின் உழைப்பு காரணம்.
சிவில் வழக்குகள் முடிவுக்கு வரும்போது இந்த நீரின் அளவு மேலும் குறைய வாய்ப்புள்ளது.
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற காவிரி வழக்கில் தமிழகம் 52 டிஎம்சி தண்ணீரை கேட்டு வாதாடியபோது, 10 ஆயிரம் கன அடி தண்ணீரை வேண்டுமானால், நல் உறவுக்கு ஆதாரமாக வழங்க தயார் என கூறியிருந்தார் நாரிமன்.
உச்சநீதிமன்றம் முதலில் 15 ஆயிரம் கன அடி, பிறகு 12 ஆயிரம் கன அடி என தமிழகத்திற்கு நீர் திறப்பை உறுதி செய்ய கூறிவந்த நிலையில், இப்போது, 6 ஆயிரம் கன அடிதான் திறக்க சொல்லியிருந்தது. இது ஒன்றும் மிகப்பெரிய அளவு தண்ணீர் கிடையாது.
அலமாட்டி அணைக்கட்டு விவகாரத்தில் கர்நாடகாவுக்கு சாதகமான தீர்ப்பை பெற்றுக்கொடுத்தது நாரிமன் டீம்தான். மேலும் ஜெயலலிதாவுக்காக, ஹைகோர்ட்டில், சொத்துக் குவிப்பு வழக்கில் நாரிமன் ஆஜராகி அவருக்கு ஜாமீன் பெற்றுத் தந்தவர் என்பதும் அறிந்ததே.... முகநூல் பதிவு
Special Correspondent FB Wing

கருத்துகள் இல்லை: