திங்கள், 2 பிப்ரவரி, 2015

வரலட்சுமிக்கு தேசிய விருதை தாரை தப்பட்டை வாங்கி தருமாம் ~ பாலா அருள்வாக்கு

சேது’, ‘நந்தா’, ‘பிதாமகன்’, ‘பரதேசி’ போன்ற  படங்களை தந்த இயக்குனர் பாலா, தற்போது ‘தாரை தப்பட்டை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சசிகுமார் நாயகனாகவும், வரலட்சுமி நாயகியாகவும் நடித்து வருகிறார்கள். இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். இது, இவர் இசையமைக்கும் ஆயிரமாவது படமாகும். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின் போது வரலட்சுமியின் நடிப்பை பார்த்து இயக்குனர் பாலா, கண்ணீர் விட்டதாகவும், அவருக்கு விலையுயர்ந்த கை கடிகாரம் மற்றும் தங்க சங்கிலியை பரிசளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இவை இரண்டும் ரூ.1.5 லட்சம் மதிப்பிலானது என்று கூறப்படுகிறது. இப்படத்தில் வரலட்சுமியை வில்லன்கள் சித்திரவதை செய்வது மாதிரியான ஒரு காட்சியை இயக்குனர் பாலா படமாக்கியுள்ளார். இந்த காட்சியில் நடிக்கும்போது வரலட்சுமியின் தோள்பட்டை எலும்பு பிசகியது. இருந்தாலும், அந்த வலியை பொருட்படுத்தாமல் அந்த காட்சியில் நடித்து கொடுத்துள்ளார். மேலும், அடுத்த நாள் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டு, குறிப்பிட்ட காட்சியில் நடித்துக் கொடுத்துள்ளார்.


படப்பிடிப்பு முடிந்த பிறகு இந்த செய்தி பாலாவின் காதுக்கு சென்றிருக்கிறது. இதைக்கேட்டதும் கண்கலங்கிய பாலா, வரலட்சுமியை நேரில் அழைத்து விலை உயர்ந்த வாட்ச் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். மேலும், தங்க சங்கிலி ஒன்றையும் பரிசாக கொடுத்துள்ளார்.

பின்னர் பாலா கூறும்போது, இந்த படத்தின் மூலம் வரலட்சுமிக்கு தேசிய விருது கிடைப்பது நிச்சயம் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: