திங்கள், 18 மார்ச், 2013

தமிழர்களால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் மிகவும் கேவலமானவை

தமிழகத்திற்கு யாத்திரை வந்துள்ள புத்த பிக்குகள் மீதும் சிங்கள மக்கள் மீதும் சில தரங்கெட்ட தமிழர்களால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் மிகவும் கேவலமானவை. இந்த காட்டு மிராண்டி தனமான வன்முறையை மேற்கொள்பவர்கள் எந்த வித தமிழ் உணர்வோ அல்லது மனித நாகரிகமோ இல்லாத ஒரு வெறி  பிடித்த குண்டர்களே ஆகும்
இவர்களது செய்கை தமிழர்கள் பக்கம் இருக்கும் கொஞ்ச நஞ்ச தார்மீக பலத்தையும் இல்லாமல் செய்துவிடும். இதை உணரக்கூடிய அளவு அறிவு இவர்களுக்கு இல்லைதான் ஆனால் இந்த வன்முறையாளர்களை வேடிக்கை பார்க்கும் அதிமுக அரசும் இதர தமிழக கட்சிகளும் இன்னும் இதை வன்மையாக கண்டிக்காமல் இருப்பது மிகவும் வெட்கக்கேடானது .
இலங்கையில் பெரும்பான்மையான தமிழர்கள் சிங்கள பிரதேசங்களிலேயே வாழ்கிறார்கள் என்ற பேருண்மை இவர்களுக்கு தெரியாது என்றும் நாம் எண்ணவில்லை.
 மேலும் கடந்த பல வருடங்களாக  இலங்கையில் இனங்களுக்கு இடையே மிகவும் சுமுகமான உறவு நிலவி வருவது புலம்பெயர் வியாபாரிகளுக்கு உவப்பில்லைதான், இவ்வளவு காலமாக கொள்ளை அடித்தது போதாதா?
இந்த  பிச்சைக்கார வியாபாரிகளை திருப்பதி படுத்த தமிழகத்தில் பச்சை பாசிசத்தை தூண்டி விடும் பச்சமுத்துவின் புதிய தலைமுறை தொலைகாட்சிகளும்,
 விற்பதற்கு வேறு ஒன்றும் இல்லாமையால் இனவெறியை விற்பனை செய்யும்  குண்டர்கள் தங்கள் அரசியல் விபச்சாரத்தை தமிழக அரசியலோடு நிறுத்தி கொள்ளவேண்டும் என்று தாழ்மையோடு வேண்டிகொள்கிறோம்
இலங்கை தமிழர்களின் வாழ்வோடு விளையாடி சொத்துக்கள் சேர்த்தது போதும். இனியாவது அவர்களை நிம்மதியாக வாழ விடுங்கள்

கருத்துகள் இல்லை: