திங்கள், 18 மார்ச், 2013

2ஜி வழக்கில் பரபரப்பு ராஜா முடிவுகளுக்கு ஒப்புதல் அளித்த பிரதமர் ?

புதுடில்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ராஜா எடுத்த முடிவுகளுக்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஓதுக்கீடு தொடர்பான முடிவுக்கு ஒப்புதல் கேட்டு பிரதமர் அலுவலகத்துக்கு ராஜா கடிதம் எழுதியதாகவும், இந்த கடிதத்தை பிரதமர் அலுவலகம் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற முடிவுக்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ராஜாவின் செயல்பாடுகளுக்கு ஆதரவாக இருந்ததாகவும், தெரியவந்துள்து. இதனால் இந்த வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: