சனி, 23 மார்ச், 2013

சசிகலா சகோதரர் திவாகரன் கைது செய்யப்பட்டார்.பின்னணி விபரம்!

திவாகரன் மீது கடந்த ஆண்டு ரிஷியூர் முன்னாள் திமுக ஊராட்சி மன்றத்தலைவர் தமிழார்வன் புகார் கொடுத்தார் என்பதற்காக ஏற்பட்ட முன் விரோதத்தால்,  திவாகரன் துண்டுதலின் பேரில் தமிழார்வனை அதே ரிஷியூரைச்சேர்ந்த ஊராட்சிமன்றத்தலைவர் கிருஷ்ணமேனன், ராஜேந்திரன் ஆகியோர் அரிவாளால் வெட்ட முயற்சி செய்ததாக நீடாமங்களம் காவல்நிலையத்தில் தமிழார்வன் கொடுத்த புகாரின் பேரில் திவாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.ரிஷியூரில் தமிழார்வனின் டிராக்டர் ஓட்டுநர் வீட்டை இடித்த வழக்கில் திவாகரன் முதல்முறையாக கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் கிருஷ்ணமேனன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும்க் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு, திவாகரன் பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: