புதன், 20 மார்ச், 2013

ஆக்ரா: இங்கிலாந்து பெண் பலாத்காரம் ஓட்டல் மாடியில் இருந்து குதித்தார்

இந்தியாவுக்கு செல்லும் இங்கிலாந்து பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் 
ஆக்ராவில் ஓட்டல் அறையில் தங்கியிருந்த இங்கிலாந்தை சேர்ந்த பெண் பலாத்கார முயற்சியில் இருந்து தப்ப மாடியில் இருந்து குதித்ததில் கால் முறிந்தது.டெல்லி அருகே ஆக்ராவில் இட்கா பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் கடந்த 3 நாட்களாக இங்கிலாந்தை சேர்ந்த 25வயதான இளம் பெண் தங்கியிருந்தார். நேற்று காலை அவரது அறைக்கு மசாஜ் செய்வது போல வந்த நபர், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதில் இருந்து தப்பிக்க அறையில் இருந்து வெளியே ஓடி வந்த பெண், மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவரது கால் எலும்பு முறிந்தது.தகவல் அறிந்து வந்த போலீசார் பெண்ணை மீட்டு ஆக்ரா மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், பெண்ணின் அறைக்கு வந்தவர் ஓட்டல் உரிமையாளர் சச்சின் சவுகான் என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.இங்கிலாந்து பெண் ணுக்கு தூதரகம் மூலம் உதவிகள் அளிக்கப்படுவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லண்டனில் கூறினார்.இந்தியாவுக்கு செல்லும் இங்கிலாந்து பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ம.பி.யில் கடந்த வாரம் இங்கிலாந்து பெண் ஒருவரை 8 பேர் கும்பல் பலாத்காரம் செய்தது குறிப்பிடத்தக்கது. பலாத்காரம் ஓட்டல் மாடியில் இருந்து குதித்து காயம் dinakaran.com

கருத்துகள் இல்லை: