வெள்ளி, 21 டிசம்பர், 2012

Nithyasree:அவருக்கும், எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை

கணவர் ஏ‌ன் த‌ற்கொலை - நித்யஸ்ரீ பரபர‌ப்பு தகவ‌ல் தாயாரை பறிகொடுத்த சோகம்தான் எனது கணவரை இந்த முடிவுக்கு தள்ளிவிட்டது என்ற மற்றபடி தனிப்பட்ட முறையில் அவருக்கும், எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை எ‌ன்று‌ம் பாடகி நித்யஸ்ரீ போலீ‌சி‌ல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கணவர் இறந்த சோகத்தில் கதறி அழுதபடி இருந்த நித்யஸ்ரீ, போ‌லீ‌சிட‌ம் கொடு‌த்த வாக்குமூல‌த்‌தி‌ல், எனது கணவர் மகாதேவன் பகல் 12 மணியளவில் காரை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினார். காரின் பேட்டரியை மாற்றுவதற்கு செல்வதாக அவர் கூறிச்சென்றார். அடுத்த 10 நிமிடத்துக்குள் அவர் ஆற்றில் குதித்துவிட்டார் என்ற இடி செய்தியை டிரைவர் சுரேஷ், என்னிடம் சொன்னார். என்னால் நம்ப முடியவில்லை.
நானும் கோட்டூர்புரம் பாலத்துக்கு ஓடிச்சென்றேன். அவரை, தீயணைப்பு வீரர்கள் தேடிக்கொண்டிருந்தனர். அதற்குமேல் என்னால் அங்கு நிற்கமுடியவில்லை. எப்படியும் அவர் உயிரோடு நல்லபடியாக வருவார் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. அவர் எதற்காக இந்த முடிவை எடுத்தார்? என்று என்னால் சொல்லமுடியவில்லை.  தனது தாயாரின் மீது அதீத பாசம் வைத்திருந்து அவரின் மரணத்தை தாங்க முடியாததால் இந்த தற்கொலை முடிவை மகாதேவன் நாடியதாக தெரிகிறது .இது உண்மையாக இருந்தால் இந்த மாதிரி அம்மா பிள்ளைகள் ஏன்தான் திருமணம் செய்து ஒரு பெண்ணின் வாழ்வை வஞ்சிக்கிறார்களோ தெரியவில்லை 
எனது கணவர், அவரது தாயார் சாந்தா மீது அதிகமாக பாசம் வைத்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி அன்று எனது கணவரின் தாயார் சாந்தா இறந்துபோனார். அந்த சோகம், எனது கணவரை மனதளவில் மிகவும் பாதித்துவிட்டது. எப்போதும் தாயாரை நினைத்தபடி இருந்தார். மனஉளைச்சலால் பாதிக்கப்பட்டார்.
இதற்காக அவருக்கு, டாக்டரிடம் சிகிச்சை அளித்து வந்தோம். தாயாரை பறிகொடுத்த சோகம்தான் அவரை இந்த முடிவுக்கு தள்ளிவிட்டது என்று நான் நினைக்கிறேன். மற்றபடி தனிப்பட்ட முறையில் அவருக்கும், எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை எ‌ன்று நித்யஸ்ரீ கூறியதாக போலீசார் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை: