புதன், 28 நவம்பர், 2012

புவனேஸ்வரி சிறையில் பிரியாணி ருசித்து சாப்பிட்டார்

ஆம்பூர் பிரியாணிக்கு அடம் பிடித்த புவனேஸ்வரி!
 வேலூர் பிரியாணி வாங்கி கொடுத்த போலீஸ்!

சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பிராத்தனா டிரைவ்-இன் தியேட்டரில் சினிமா பார்ப்பதற்காக நடிகை புவனேஸ்வரி, தனது நண்பர்களுடன் காரில் வந்தார்.


அப்போது, தியேட்டரில் காரை நிறுத்தும் போது முன்னால் சென்ற சேலையூரை சேர்ந்த குமார் என்பவரின் கார் மீது மோதியது.

இது தொடர்பாக, புவனேஸ்வரிக்கும், குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கைகலப்பும் நடந்தது.சினிமா தியேட்டரில் ரகளை செய்து போலீசாரை தாக்கிய வழக்கில் தலைமறைவான புவனேஸ்வரி பெங்களூர் தப்பிச்செல்ல முயன்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.ஆம்பூர் போலீசார், புவனேஸ்வரியை கைது செய்த போது, "நான் சாப்பிடவில்லை' என, அவர் கூறினார். இட்லி, தோசை வாங்கி தந்த போது, "எனக்கு, ஆம்பூர் பிரியாணி வேண்டும்' என கேட்டார். "இந்த நேரத்தில், பிரியாணி ரெடியாகாது' எனக் கூறிய போலீசார், இட்லி, தோசை கொடுத்துள்ளனர். புவனேஸ்வரி தோசை மட்டும் சாப்பிட்டார்.
நீலாங்கரை போலீசார் வரும் வரை, சத்துவாச்சாரி போலீஸ் ஸ்டேஷனில் புவனேஸ்வரி காத்திருந்தார். அந்த நேரத்தில், பிரியாணி குறித்து, மீண்டும் பேச்சு எழுந்தது. சில போலீசார், ஆர்வமாக, "ஆம்பூர் பிரியாணிக்கு பதில், வேலூர் பிரியாணி நன்றாக இருக்கும்' என்று கூறி, வாங்கி கொடுத்துள்ளனர். அதை புவனேஸ்வரி, ருசித்து சாப்பிட்டார் என்று கூறப்பட்டது.
நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும், ஆம்பூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு, அங்குள்ள போட்டோகிராபர்கள், நிருபர்கள் சென்றனர். படம் எடுக்க விடாமல், பல காரணங்களை கூறி, போலீசார் தடுத்து விட்டனர். பிறகு, சத்துவாச்சாரி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து, ரகசியமாக, நீலாங்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்

கருத்துகள் இல்லை: