ஞாயிறு, 25 நவம்பர், 2012

உதயநிதியின் ஜோடியானார் நயன்தாரா!

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா.
அணில்(கள்) கடிச்ச பழத்துக்குதான் ஏக கிராக்கி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நயன்தாராவின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. தமிழிலும் தெலுங்கிலும் அவர் கால்ஷீட்டுக்கு கோடிகளில் கொட்டித் தரத் தயாராக உள்ளனர் தயாரிப்பாளர்கள்.
ஏற்கெனவே தமிழில் அஜீத்குமார் மற்றும் ஆர்யா படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் நயன்தாரா. தெலுங்கில் 4 படங்களில் நடிக்கிறார்.
இப்போது அடுத்த தமிழ்ப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ஓரு கல் ஒரு கண்ணாடி படத்துக்குப் பிறகு, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

ரெட்ஜெயன்ட் மூவீஸ் தயாரிக்க, சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ் ஆர் பிரபாகரன் இயக்கும் படமிது. வரும் ஜனவரியில் படம் தொடங்குகிறது.
ஒரு கல் ஒரு கண்ணாடியிலேயே நயன்தாராதான் நாயகியாக நடிக்க விருந்தாராம். பிரபு தேவா விவகாரத்தால் அவர் அப்போது படங்களில் நடிப்பதைத் தவிர்த்ததால் அப்போது கால்ஷீட் தரவில்லையாம்.
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை வாங்கி வெளியிட்டதிலிருந்தே நயனுடன் உதயநிதிக்கு நல்ல நெருக்கம் என்பது குறிப்பிடத்தக்கது!

கருத்துகள் இல்லை: