திங்கள், 26 டிசம்பர், 2011

கலைஞருடன் போய் பிரதமரை சந்தித்த கனிமொழி

சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளியாகியுள்ள திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, இன்று காலை தனது தந்தை கருணாநிதியுடன் சென்று பிரதமரைச் சந்தித்தார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கிய பின்னர் பிரதமரை கனிமொழி சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
இன்று காலை பிரதமரை கருணாநிதி சந்தித்து முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மனு ஒன்றை அளித்தார். இந்த சந்திப்பின்போது முக்கிய நபராக கனிமொழியும் உடன் இருந்துள்ளார்.. .

கருத்துகள் இல்லை: