புதன், 21 செப்டம்பர், 2011

இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்தால் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வோம்

வடகடலில் மீண்டும் இந்திய மீனவர்களது ஊடுருவல் அதிகரித்துள்ளதாகவும் இதனால் வடகடல் வளங்கள் பெருமளவில் இந்திய மீனவர்களினால் அள்ளிச் செல்லப்படுவதாகவும் வடமாகாண கடற்றொழில் சமாசங்களின் தலைவர் எஸ். தவரெட்ணம் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதங்களில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய ஊடுருவல் இல்லாது இருந்ததாகவும் மீண்டும் அது அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் இந்திய மீனவர்களின் அத்துமீறிய அடாவடித்தனத்தை இந்திய அரசு மற்றும் இலங்கை அரசு நிறுத்தாவிட்டால் கடலில் இறங்கி இந்திய மீனவர்களைச் சிறைப் பிடிப்போம் என எச்சரித்துள்ளார்.

வடகடல் மீனவ்களின் வளங்களை சூறையாடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் எனவும் தொடர்ந்து அதிகரித்தால் நாங்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: