சனி, 24 செப்டம்பர், 2011

மாகாண சபைகளுக்கு காவற்துறை மற்றும் காணி அதிகாரங்கள் தேவையில்லை - பேர்டி!

மாகாண சபைகளுக்கு காவற்துறை மற்றும் காணி அதிகாரங்கள் தேவையில்லை - பேர்டி!

மாகாண முதலமைச்சர்களின் 29 வது, மாநாடு இன்று எம்பிலிபிட்டியவில் ஆரம்பமாகிறது.
கடந்த வரும் இந்த மாநாட்டுக்கு சப்ரகமுவ மாகாணம் தலைமை வகித்தது.
இதற்கிடையில் நாளை இடம்பெறும் மாநாட்டின் போது, ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து பேசவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேம்லால் இந்த தகவலை எமது செய்திசேவைக்கு வழங்கினார்.
இதேவேளை, மாகாண சபைகளுக்கு காவற்துறை மற்றும் காணி அதிகாரங்கள் குறித்து, இந்த மாநாட்டின் போது பேசப்படுமா என்று எமது செய்திப்பிரிவு, பேர்டி பிரேம்லாலிடம் வினவியது.

இந்த அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு தேவை இல்லை என்று அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: