வியாழன், 17 செப்டம்பர், 2020

எவரும் பெண்விடுதலை, சாதியொழிப்பபு, மூட நம்பிக்கை ஒழிப்பு என வெளிகிடத்தேவையில்லை .. ஒரு யாழ்ப்பாண முகநூல் விவாதம்

 Rajh Selvapathi :· இலங்கையிலும் பெரியார், பெண்விடுதலை என்று ஒரு கும்பல் அதுவும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் கிளம்பி வருகின்றது. இந்த விச செடிகளை முளையிலேயே கிள்ளி எறிந்து விடுங்கள். உங்கள் வீடுகளில் யாராவது பெரியார், திராவிடம்,பெண்ணியம் என்று பேசுவதையோ அல்லது புத்தகங்கள் வைத்திருப்பதை கண்டால் அடித்து நொருக்கி கொழுத்தி விடுங்கள். தமிழின விரோதிகளான இந்த கும்பலை கண்டால் உயிருடன் தீயிட்டு கொழுத்துங்கள். "பெரிச்சாளியையும் பெரியாரிஸ்டுகளையும் கண்டால் பெரிச்சாளியை விட்டு பெரியாரிஸ்டுகளை அடி." திருட்டு திராவிடம் ஈழத்தில் வேண்டாம். பி.கு: பெண்விடுதலை, சமூக விடுதலை எல்லாம் பிரபாகரன் செய்து முடித்துவிட்டு போய்விட்டார். உங்கள் பருப்புகளை மூட்டை கட்டி எடுத்து சென்றுவிடுங்கள். ஆட்லரியை கட்டி இழுத்து வந்து ஆண் ஆர்மிகார்களை அடித்து விரட்டியவர்கள்தான் ஈழத்து தமிழ் பெண்கள். நீங்கள் ஒன்றும் பிடுங்க தேவையில்லை. 

Janaki Karthigesan Balakrishnan : இலங்கைத் தமிழ் அரசியலை மிகப்படு பிற்போக்குத்தனமாகவும் , வன்முறையாகவும் கொண்டு செல்ல இலங்கையில் சிலர் மும்முரமாக இருப்பதை இப்பதிவு மிகவும் வெளிப்படையாக காண்பிக்கிறது. இலங்கையில் பெண்கள் மட்டுமல்ல அனைத்து பிரிவினரும் அவதானமாக இருக்க வேண்டும். இப்பதிவிற்கு பல யதார்த்தமாக எதிர்ப்புத் தெரிவித்து கருத்துக்களை ஏற்கனவே பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் நன்றியும், பாராட்டுதல்களும். முகநூல் வட்டம் நண்பர்களுடன் பத்தாம்பசலித் தனத்தையும் இணைத்து விடுவது கவலைக்குரியது, ஆனால் தவிர்க்க முடியாது. KKK ஐ விட மோசமான பதிவு.

Suthar Suthar : எப்பவும் மதம்... கோவில்...விரதம்... இயேசு... prayer... மசூதி... மாஸ் என்று திரியுறவங்களை என்ன செய்யலாம் பாஸ்.... 

 Kumarasamy Arumugam : Several Tamil groups received the know-how also provided the required expertise !

 Michael Amalraj :   மோசமான பார்வை. அப்படியென்றால்.. உங்களுக்காக இந்தியாவில், நாங்கள் ஏன் போராடவேண்டும்?  

 Jeevan Prasad : புத்தர் சொன்ன தத்துவங்களை பௌத்தர்கள் எல்லோரும் பின்பறுவதில்லை. இந்துத்துவத்தில் உள்ள நல்ல கருத்தான அன்பே சிவம் என்பதை இந்துக்கள் எல்லோரும் பின்பற்றுவதில்லை. ஏசு - அல்லா எல்லோர் சொன்னதையும் அவர்களை பின்பற்றுவதாக சொல்வோர் பின்பற்றுவதில்லை. பெரியார் அல்ல பிரச்சனை. பெரியார் பேரில் சிலர் செய்யும் தகிடு தத்தங்கள்தான் பிரச்சனை. 

Kumarasamy Arumugam : இந்த திருடர்களிடம் தமிழர்கள் ஜாக்கிரதை ஏன் எனின் இவர்கள் பேசிப் பேசி பணம் சம்பாதித்து தமிழர்களை ஏய்க்கும் அயோக்கியர்கள்! நல்ல தொண்டாயிற்றே! வருமானமான நட்டமில்லாத தொழில் 

Thilipkumaar Ganeshan : ஓரமாப் போய் விளையாடுங்க அண்ணா. சிரிப்பா இருக்கு. 

 ராம் ராம் : ஆரம்பத்திலிருந்தே வடக்கு-கிழக்கு கல்வியால் தன்னிறைவு அடைந்துள்ளது பின்பு திராவிட வந்தவர் பெரியார் வந்த பின்புதான் கச்சை கட்ட வைத்தார் பெரியார் தான் படிக்க வைத்து பெரிய செருப்பு போட வைத்தார் முட்டாள்தனமான கதைகளை பரப்பி திராவிட மக்களுக்கு வாடிக்கையாக உள்ளது உலகத்துக்கே முதல் பேராசிரியர் தனது மட்டக்களப்பு மாவட்டம் பெரியார் என்பது வடக்கு கிழக்குக்கு தேவையில்லாத ஆணி 

 ராம் ராம் : அந்த மூத்திரச் சட்டியைத் வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் கொண்டாடுங்க இலங்கையில் தயவுசெய்து அந்த தேவையில்லாத ஆணி கொண்டு வராதீர்கள் 

 Thilipkumaar Ganeshan : ராம் ராம் ஆணியப் புடுங்க வேணாம். 

 Rubasangary Veerasingam Gnanasangary : பிரபாகரனின் பெண் விடுதலை ஆட்லறி அடித்து குண்டி கழுவ கைகள் இல்லாமல் போனதுடன் முடிந்து விட்டது. 

Chittibabu : சாதி..மதம்..கடவுள்.. மூடநம்பிக்கைகள் வேண்டாம் என்று சொன்னவர் பெரியார்.. பெண் உரிமை.. பகுத்தறிவு..திண்டாமை எதிர்ப்பு..என் பலவற்றில் பெரியாரின் பங்கு மிகப்பெரியது.. மனிதன் சாதி..மதங்களை கடந்து பகுத்தறிவு உள்ள மனிதனாக மட்டுமே இருக்கவேண்டும் என்று சொன்ன பெரியாரின் மேல் ஏன் இத்தனை வன்மம்? 

Thevi Tharma-Bala : ஔவையார், பாரதி என பலர் சென்னது.. 

Rubasangary Veerasingam Gnanasangary L : சொன்னது வேறு அதை ஐம்பது வருடங்கள் ஊர் ஊராக சென்று பாடம் எடுத்தது வேறு. 

 Kulam Peter : எதுக்கையா பகுத்தறிவால் கருத்து சொல்பவர்களோடு இந்த வக்கிரம் ,,.?பிற்போக்கு தனமாக நீங்களும் பார்க்கிறது கவலையாக உள்ளது ,அலையங்களுக்குள் சாதியால் பலர் தடை ,மதங்களாம் பிரிவு ,இது தேவன் ,கடவுள் ,ஆண்டவன் ,சாமி ,தெய்வம் என்றெல்லாம் தமிழில் இருந்தாலும் ,இதை அவர்கள் உருவாக்கினார்களா .?இல்லையே ,பெரியார் மிகச்சிறந்த அறிவாளி ,உனக்கு அது அலர்ஜியோ ,.?சரி நீ சாதிவிட்டு கல்யாணம் உனது பக்கத்தில் உள்ள வீட்டில் செய்யலாம் தானே ..?உன்னால் முடியாது ,.சும்மா தமிழர் என்ற போலிக்குள் உணர்வு ,,புலிகளின் உணர்வாளர் போல . 

 Yoga Valavan Thiya : மிகவும் கவலைக்குரிய விடயம். இப்போதெல்லாம், புலி எதிர்பு பேசிய பலர் பாசிஸ்டுகளாக மாற்று கருத்தாளர்களின் குரல் வளையை நசுக்குகின்றனர். இரு தினங்களுக்கு முன்னர் இவரது பதிவிலேயே ஒரு பெண்மணி வந்து புலம் பெயர்ந்த நாட்டில் இருந்து கொண்டு நான் இலங்கை அரசியல் பேச கூடாது என்று இடிந்துரைத்தார். இத்தனைக்கும் தம்பியை நான் கேட்டது கிழக்கு மாகாண தொல்லியல் செயலணியில் ஏற்கனவே நியமிக்கபட்டுள்ள இராணுவ அதிகாரிகள் பெளத்த பிக்குகள் தொல்லியல் நிபுணர்களா என்றதையே..... இத்தனைக்கும் அவருக்கு என்னை நன்கு தெரியும்.எனது கடந்த காலவரலாறும் தெரியும், இலங்கையில் இன நல்லிணக்கத்துக்காக பாடுபடுபவன் என்பதும் தெரியும். அப்படி இருந்தும் அவர் என்னை இலங்கை அரசியல பேசாதே என்றதும், எனது குரல் வளையை நசுக்க அவர் முற்பட்டதும் எனக்கு கடந்த 3 நாட்களாக பெரும் மன உளைச்சலை தந்து கொண்டிருக்கின்றது. அவரிடம் இருந்து இவ்வகை தடையை நான் எதிர்பார்கவே இல்லை. இத்தனைக்கும் நான் இரட்டை குடியுரிமை உள்ளவன். புலிகள் பலமாக இருந்த காலத்திலேயே புலிகளின் ஜனநாயக விரோத செயற்பாடுகளை கண்டித்து வந்தவன். இப்படியான செயற்பாடுகளில் இருந்து நான் புரிந்து கொள்வது, மாற்று கருத்துக்களை சகித்து கொள்ள முடியாத பாசிச மனப்பான்மை இலங்கை தமிழர்களின் மனதில் ஆழ வேரூண்டி உள்ளதென்பதையே. ஆண்கள், பெண்கள், புலி ஆதரவாளர்கள், எதிர்பாளர்கள் எவரிடமும் வித்தியாசம் இல்லை. ஆழ்மனதில் பாசிச சிந்தனை வேரூண்டி உள்ளது 

Yoga Valavan Thiya : தம்பி புனானை கொரோனா தடுப்பு முகாமில் இருப்பதனால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கின்றீர்கள் போலும். ஜனநாயகம் பற்றி அதிகம் பேசுகின்ற நீங்கள் எப்படி, உங்களுக்கு மாற்று கருத்துள்ளவர்களை அடியுங்கள், கொல்லுங்கள் தீயிடுங்கள் என்றெல்லாம் கூறுகின்றீர்கள். உங்கள் கருத்துடன் உடன்படவில்லை என்றால் அவர்கள் தீண்டதகாதவர்களா ? அவர்கள் கருத்துக்கான உங்களது மாற்று கருத்தை கூறுங்கள் அதனைவிடுத்து வன்முறையை தூண்டும் வகையில் எழுதாதீர்கள். இப்படி எழுதி உங்கள் தரத்தை தாழ்த்தி கொள்ளாதீர்கள்.

Thevi Tharma-Bala : ஈ. வெ. ரா இலங்கையில் ஒரு செல்லாக்காசு தமிழகத்தில் இப்போதுதான் அவர்வண்டவாளத்தைப் போட்டுதாக்குகிறார்கள இனி அவர்கதை முடிந்தகதை.

 Ganeshalingam Kanapathipillai : புலிகள் எல்லாம் செய்துவிட்டுப்போய்விட்டார்களா? அப்படியென்றால் ஏன் சாதியத்தற்கொலை இடம்பெற்றது? பெரியார் செய்துமுடித்த நல்லவிடயங்களில் ஒரு மசிரக்கூட பிரபாகரன் செய்யவில்லை... 

 Sivanesan Singarasa : பெரியார் ஒரு பக்கி அவன் மிசனரிகளின் அடிமை மிசனரிகள் என்ன சொல்கின்றனவோ அதையே செய்யும் வேலைகாரன் 

Senthilkumar Ksp Senthilkumar Ksp : ........ எப்படிப்பட்ட ...ஜாதிய கட்டுமானம் ..... சமூகக் கட்டுமானம் .... இந்த தமிழகத்தில் .... இருந்தது ... தெரியுமா ....... இன்றைக்கு உங்களுக்கு நல்லவர் போல தெரிபவர் ... பற்றி உங்களுக்கு தெரியவில்லை ...... பேரரசர்களை .... கண்டுகொள்ளாமல் ..... விட்டதற்கு காரணம் .... ஒரு சென்டிமெண்ட் தான் ........ பழைய கோயில்கள் புனருத்தனம் செய்யாமலிருப்பதற்கும் .... ஒருவித சென்டிமெண்டே காரணம் .... அதில் உண்மையும் இருக்கிறது .......

 ராம் ராம் உண்மைதான் இந்த ஈவேரா கும்பல் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில்தான் சுற்றுகின்றது..

 Paheerathan Kuna : எதையும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பதும் ஒட்டுமொத்தமாக கண் மூடிக்கொண்டு ஆதரிப்பதும் அறிவு பூர்வமாகாது. பெரியாரின் சிந்தனைகள் பல பயனுள்ளவை மூட நம்பிக்கைகளை உடைத்தெறிபவை அதை மொத்தமாக எடுத்தெறிவது ஆகாது. 

 Bharathi Gunabharathi : ஈழத்தை காலி பண்ணாம விடமாட்டாய்ங்க.முசுலீம்கள் மூலம் ஊடுறுவி ஆட்டைய போட்றுவானுங்க. Rajh Selvapathi : ஆமாம்.

 K.T. Maaran : மகள் வயதில் உள்ளவர்களை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறாங்களோ என்னவோ .. Yoga Valavan Thiya : மிகவும் கீழ்தரமான பேச்சு. இப்படி பேசுவதன் மூலம் உங்களது சில நியாயமான அரசியல் கருத்துக்களையே நீர்த்து போக செய்கின்றீர்கள். ஏ. பகலவன் : வந்துட்டீங்களா? விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் எவரும் இல்லை.

 K.T. Maaran : நான் போகவே இல்லையே.. திரும்பிவர ,,, 

 K.T. Maaran : ஏங்க?? அவர் செய்யாத ஒன்றையா சொல்லிவிட்டேன்?? சமூக சீர்திருத்த வாதிகள் சமூகத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டாமா?? சரி பெரியாரிஸ்டுக்களுக்கு இலங்கையில் என்ன வேலை?? போராட்டகாலங்களில் கடல் கடந்து வந்து எதையும் கிழிக்காதவர்கள் இப்ப மட்டும் ஏன் வருகிறார்கள் ?? இலங்கையில் ஏன் தோற்றம் பெறுகிறார்கள்?? சரி தமிழ்நாட்டில் தான் பெரியாரின் பெண்ணியம் மதிக்கப்படுகிறதா?? மூட நம்பிக்கை ஒழிக்கப்பட்டு விட்டதா?? சாதியம் அழிந்து போச்சா?? தொடங்கிய இடத்திலேயேயே நிறைவேற்ற முடியவில்லை அப்புறம் ஏன் இலங்கையில்.. புதிது புதிதாய் அரசியல் கட்சிகளும் சமூதாய சிர்திருத்த அமைப்புகளும் பணத்துக்கும் பதவிகளுக்கும் தோற்றம் பெறுகின்றனவே தவிர இலங்கையில் கூட ஏழை எளியவர்கள் ஏழை எளியவர்களாகவே.. பெண்களும் மதிக்கப்படலை.. சும்மா பெயருக்கு கிளை பரப்பலுக்கே... கடவுள் எதிர்ப்பை வைத்து தனியவே இந்து மத த்தை விமர்சித்து மதமாற்றவாதிகளிடம் இருந்து தரகுப்பணம் பெறும் உத்தியாகவே இது அமையும் புலிகளால் உடைத்து எறியப்படாத பெண் விடுதலை/ உரிமை, புலிகளால் உடைத்தெறியப்படாத சாதி, புலிகளால் உடைத்தெறியப்படாத கடவுள் நம்பிக்கை இவர்களால் உடைத்தெறியப்படுமா?? 

Yoga Valavan Thiya : உங்களது முதல் பின்னூட்டம், நீங்கள் இங்கு கூறியது பற்றியது அல்ல.மாறாக மகள் வயதில் உள்ளவர்களை கலியாணம் செய்ய ஆசைபடுகின்றார்களோ என அத்தனை பேரையும் கொஞ்சை படுத்தும் கீழ்தரமான தாக்குதல். இப்ப நீங்கள் சொன்னதை முதலில் நீங்கள் சொல்லியிருந்தால் நான் கடந்து போயிருப்பேன். பெண் உரிமை பெண் விடுதலை பற்றி உற்சாக படுத்தும் நீங்களே பெண்களை ( மகள்) என்பதை மையப்படுத்தி மிகவும் கொச்சையான பின்னூட்டத்தை இட்டுள்ளீர்கள். இது உங்களுக்கு முரண்பாடாக தெரியவில்லையா ? 

 K.T. Maaran : கடவுள் எதிர்ப்பை வெளிக்காட்டும் வேலு பிராகரன் செய்தது என்ன?? அந்த செயல் ( மகள் வயதுக்கார ர்களை மணப்பது சமூகத்துக்கு ஆரோக்கியமானதா இல்லையா?? அதை சமூகத்துக்கு ஆரோக்கியம் என நீங்கள் கருதுவீர்கள் என்றால் நான் இந்த விடயத்தை உவ்களுடன் விவாதிப்பதை தவிர்கலாம். நான் அத்தனை பேரையும் கொச்சைப்படுத்தியதாக எப்படி நினைக்கீறீர்கள்.. பெரியார் செய்த சில தவறுகள் பெரியார் செய்த/ செய்ய முனைந்த நல்லதுகளையும் மழுங்கடித்தன என்பதை சுட்டிக்காட்ட முயன்றேன். பெண் உரிமையை/ பெண் விடுதலையையோ/ பெண் சமத்துவத்தையோ பெரியார் வழி மட்டுமே போய்த் தான் நிலை நாட்டமுடியும் என்றில்லை தானே. இவை ஒவ்வொரு ஆண் மனதிலும் அவரவர் தாயால் சிறுவதில் இருந்து உணர வைத்து விதைக்கப்பட வேண்டியவை. இதற்கு பெரியார் பெயர்பலகை தேவையில்லை என்பதே எனது நிலைப்பாடு.   

Yoga Valavan Thiya : இங்கு நான் பெரியாரை ஆதரித்தோ எதிர்த்தோ கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை உங்களது பின்னூட்டமான //// மகள் வயதில் உள்ளவர்களை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறாங்களோ என்னவோ ../// இதுவே கீழ்தரமானது என்றே கூறினேன். கருத்தை கருத்தால் எதிர்கொள்வதை விடுத்து, கீழ்தரமாக சேறடிப்பதை உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை . இப்படி செய்வதன் மூலம் உங்களை நீங்களே தரம் தாழ்த்தி கொள்கின்றீர்கள்..... உங்கள் மீதுள்ள நம்பிக்கை அபிமானத்தாலேயே இதனை கூறுகின்றேன். வேறு எவராகிலும் என்றால் கடந்து போயிருப்பேன். உங்களது தவறை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையாயின் மேற்கொண்டு உங்களுடன் விவாதிப்பதில் பிரியோசனம் இல்லை. ஒதுங்கி போகின்றேன். 

Vignesh L Nathan : மகள் வயதில் உள்ளவர்களை கல்யாணம் செய்ய ஆசைப்படுகிறார்களோ என்னவோ என்பது மிகவும் தவறான கருத்து. மகள் என்பதை பேத்தி என்று மாற்றிக்கொள்ளவும். ஏ. பகலவன் : உங்கள் மீது எனக்கிருந்த நம்பிக்கையை நீங்களே தகர்த்து விட்டீர்கள். புலிகள் மட்டுமல்ல எங்கேயும் போர் நடக்கும் போது பிற மூடத்தனமான உணர்வுகள்,சுரண்டல்கள் தற்காலிகமாக மழுங்கடிப்பது இயல்புதான். தற்போது உங்கள் முன் என்ன பிரச்சினை உள்ளது அதை எப்படி அகற்றுவதென்று ஆலோசனை கூறுங்கள். 

 K.T. Maaran : ##உங்கள் மீது எனக்கிருந்த நம்பிக்கையை நீங்களே தகர்த்து விட்டீர்கள்.## எனது பதிவால் உங்களுக்கு ஏதாவது தனிப்பட்ட முறையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் மனம் வருந்துகிறேன். ஆனால் எனது எந்த பதிவுகளையும்; எவர் மீதாவது எனக்கு நம்பிக்கை/ அவநம்பிக்கை வர வைக்கும் நோக்கில் போடுவதில்லை. அந்த அந்த விடயம் சம்பந்தமான எனது கருத்துக்களையே போடுகிறேன். பெரியார் செய்த சமூகத்துக்கு விரும்பத்தகாத ஒரு செயலை சுட்டுக்காட்டினேன்.அவர் செய்யாத ஒன்றை இல்லைத்தானே?? நம்மூரில் சாதி ஒழிப்பையும் பெண் விடுதலையையும் பெரியார் என்ற பெரியார் பெயர்பலகை மூலம் தானே உறுதிப்படுத்த முடியும் 2) ##புலிகள் மட்டுமல்ல எங்கேயும் போர் நடக்கும் போது பிற மூடத்தனமான உணர்வுகள்,சுரண்டல்கள் தற்காலிகமாக மழுங்கடிப்பது இயல்புதான்.## மற்றவருக்கு இருப்பது ;”மூடத்தனமான உணர்வுகள்” என நாமே அவர்கள் உணர்வுகளை கணிப்பீடு செய்யவது எந்த வித த்தில் நியாயம்/ சரி?? ஒன்றில் ஒருவருக்கு வெறித்தனம்/ அளவுக்கு மிஞ்சிய நம்பிக்கை வரும் போது சுரண்டல்களும் தலை தூக்கும். அது கடவுள் மீதான அளவு கடந்த நம்பிக்கையாகவும் இருக்கலாம் பெரியார் மீதான அளவுகடந்த நம்பிக்கையாகவும் இருக்கலாம் புலிகள் மீதான அளவுகடந்த நம்பிக்கையாவும் இருக்கலாம். அந்த அளவு கடந்தது தான் அடிமைத்தனத்துக்கு கூட வழி வகுக்கும். 

3) ##தற்போது உங்கள் முன் என்ன பிரச்சினை உள்ளது அதை எப்படி அகற்றுவதென்று ஆலோசனை கூறுங்கள்.

 அன்றும் இன்றும் ஒரே பிரச்சினை தான். சமுதாயத்தில் இருந்து ஏழ்மை விலகி நீதி நியாயமான செயல்படும் ஒரு சதுதாயத்தை உருவாக்கவேண்டும்( புலத்தில்) அதற்கு தொழில் வாய்புகள் ஏற்படுத்தப்பட்டு உழைத்து வாழும் மனநிலை உள்ள நீதிநியாயமாக சிந்தித்து செயல்பட வேண்டிய ஒழுக்கத்தை சிறு வயதில் இருந்து புகட்டவேண்டும். மற்றும் படி எவரும் பெண்விடுதலை/ சாதியொழிப்பபு என மூட நம்பிக்கை ஒழிப்பு என வெளிகிடத்தேவையில்லை 

Nanthi Varman : ".. ஆட்லரியை கட்டி இழுத்து வந்து ஆண் ஆர்மிகார்களை அடித்து விரட்டியவர்கள்தான் ஈழத்து தமிழ் பெண்கள். .."தமிழர்களின் பெண்ணியம், கடவுளர் முதல் சங்க இலக்கியங்கள் ஊடே நேற்று வரை இவ்வாறாக நிகழ்ந்து வந்திருக்கிறது/ 

 

Vignesh L Nathan : ஈழத்திற்க்கு பெரியார் ஒரு தேவை இல்லாத ஆணி. சாதி மறுப்பு பெண்விடுதலை மணக்கொடை தடை போன்ற சமூக சீர்திருத்த விடயங்களில் பெரியாரை விட பிரபாகரன் பல மடங்கு சாதனைகளையும் சீர்திருத்தத்தையும் செய்துவிட்டார். 

 Thamilselvan Murukaiya : ராஜ் இது உங்களுடைய மிக மோசமான பதிவு.

 Panneer Selvam : பெரியார் அவர்களை படியுங்கள். அவர் போல் ஆள் இல்லாத காரணத்தால் உபி பீகார் போன்ற மாநிலங்கள் பின் அடைந்து உள்ளது.

 Rajh Selvapathi : கிழிஞ்சுது போ. நீங்கள் இங்கே வந்து தமிழின் பெருமையை படியுங்கள். அசு என்ன உபி, பீகார்? டர்நூடகா ஆந்திரா, டெல்லி, கேரளா, மகாராஸ்ரா எல்லாம் இந்த பெரியாரை படித்தா முன்றேரினார்கள்?

ராம் ராம் : உலகத்துக்கே முதல் பேராசிரியை கொடுத்தது இலங்கையில் பின்பு எதற்கு ஈ வெ ராவை படிக்க வேண்டும் சரி அவர் என்னதான் படித்து எந்த பட்டம் பெற்றார் அவரை படிப்பதற்கு 

 Panneer Selvam : கேரளாவில் தான் தன் முதல் போராட்டத்தை ஆரம்பித்தார். உன்னை நீ அறிந்து கொள் என்று சொன்னால் தப்பா? மனிதர்கள் அனைவரும் சமம் என்று சொன்னால் தப்பா? 

 Rajh Selvapathi : எப்படி அடுதாதவன்  மனைவியை அபகரிப்பது என்பதை பெரியாரிடம் இருந்து படிக்கலாம். 

Rajh Selvapathi : இதை அவர் மட்டுமா சொன்னார். பகவத்கீதையில் கிருஸ்னர் அதைதான் கூறினார். புத்தர் அதைதான் கூறினார். இவர் என்னத்தை அப்படி புதிதாக கூறினர்? 

Panneer Selvam : அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ் எந்த கல்லூரியில் பட்டம் பெற்றவர்கள்?

 Panneer Selvam : கணவனை இழந்த பெண் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பேசி மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர். அந்த காலத்தில் இது மிக பெரிய கருத்து. 

 Rajh Selvapathi : கணவனை இழந்தவள் மறுமணம் செய்ய வேண்டும் என்பதெல்லாம் ஒரு தத்துவமா? இந்த தத்துவத்தால் கணவனை இழக்காதவல்கூட அடுத்தவளின் கணவனை இழுத்துக்கொண்டு ஓடிய அசிங்கங்கள் தான் நிகழ்ந்தது. வைப்பாட்டிகள் நாடாளும் நிலையை உருவாக்கியது. 

 Kanapathippillai Aneethan : வேணும் எண்டா இந்தியாவில வைச்சுங்க பெரியாரை இங்கே வேணாம்... 

Chittibabu to Rajh Selvapathi ": தமிழகம்.. இந்தியாவில் தனித்து விளங்குவதில் பெரியாரின் பங்கு மிகப்பெரியது.. நீங்கள் சொன்ன மாநிலங்களில் சாதி அடையாளம் இல்லாமல் பெயரே இல்லை என்பதை அறிக.. மூடநம்பிக்கைகள் பல ஒழிந்து உள்ளன.. கல்வி..தொழில்....மருத்துவத்தில் தமிழகம் நீங்கள் குறிப்பிட்டுள்ள மாநிலங்களை விட சிறந்து விளங்குகிறது.இப்படி பல... 

 Panneer Selvam : 1974 இல் கிராமங்களில் மின்சாரம் வந்து விட்டது. மற்ற பல மாநிலங்களில் இன்றும் மின்சாரம் வரவில்லை. இது திராவிட ஆட்சியின் சாதனைகளில் ஒன்றே 

 Rajh Selvapathi : அது இந்திராகாந்தியின் சாதனை என்று கூறுங்கள். 

 Rathnakumar Se : ஐயா நீங்கள் வடிவேலு க்கு நகைச்சுவை எழுதலாம் உங்களிடம் நல்ல நகைச்சுவை சிந்தனை உள்ளது/ 

Shanmunganathan Jeasingam : இவங்க எல்லாம் பெரியாரைப்பற்றி முழுமையாக அறியாமல் சில் எதிர்ப்பாளர்கள் பேசுவதைக்கேட்டு அதை அசை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்,,அந்தக்கருத்துக்களுக்கு பதில் சொல்வதைக்கேட்பதில்லை...இது தான் உண்மை,,நான் சிலருடன் கதைதுள்ளேன்/ 

Siva Murugupillai : மிகவும் கணடனத்திற்குரிய பதிவு தவறான புரிதல் சற்று தெளிவடையுங்கள். 

 Villa Anandaram : "திருட்டு திராவிடம் ஈழத்தில் வேண்டாம்." மெத்த சரி. இந்தியாவில் இருந்து எதுவும் வேண்டாம் சிவசேனா உட்பட. சினிமா கலாசாரம், சங்கிகளின் ஊடுருவர் வேண்டவே வேண்டாம். பகுதறிவும், பெண் விடுதலையும் இந்தியாவில் இருந்து கற்க்க வேண்டிய தேவை இல்லை. அது திராவிட இயக்கமானால் என்ன இந்து மதவாதமானால் என்ன. பகுதறிவை கற்றுக்கொள்ள, பெண் உரிமையை பாதுகாத்துக்கொள்ள இலங்கையிலேயே தேவையான தலைமைகள் முன்னுதாரணங்கள் உள்ளது. அது காணாதென்றால் இது இணையதள காலம். உலகம் முழுதும் அறிவியல் பரவிக்கிடக்கின்றது. கோயில்களையும், சமய நூல்களையும், சாதீயத்தையும், பெண்ணுக்கு ஒரு நீதி ஆணுக்கொரு நீதி என்று வாழும் கலாச்சாரத்தையும் அடித்து நொருக்கி கொழுத்தி விடுங்கள். 

Chittibabu to Villa Anandaram : அதென்ன திருட்டு திராவிடம்? ஓ நீங்க சீமான் வகையறா?அவரே அயல்நாட்டு தமிழர்களிடம் கொள்ளை அடித்ததில் தம்பிகளுடன் பிரச்சினையில் உள்ளார் என்பதை அறிக.. 

Villa Anandaram : நீங்கதான் சீமான் வகையறை போல. அவங்களுக்கு தான் எழுதுவது எதுவும் புரிவதில்லை. திரும்பவும் ராஜின் பதிவை வாசித்து விட்டு என்பதிலை வாசிக்கவும். அப்போதும் புரியாவிட்டால் மறுபடியும் வாசிக்கவும். 

Shanmunganathan Jeasingam : யார் நீங்கள்,,,?உங்கள் சிந்தனை என்னா,,,?வேக்ஷம் போடுகிறீகளா...?

 Vimal Kulanthaivelu : நாங்கள் எப்போதும்போலவே மத அடிப்படைவாதிகளாகவும், ஆணாதிக்கவாதிகளாகவுமே இருந்து கொள்வோம். 

Kajatheepan Murukesu : பெரியாரும் மயிரும்.. 

தற்கொலை செய்த மணப்பெண் 

 ஏ. பகலவன் : சாதி- பிராமணர்கள், இவரது படிப்பு-வங்கி மேலாளர், சம்பளம்-150,000ரூபா, கணவர்- யாழ் ஆஸ்பத்திரியில் வைத்தியர். சம்பளம் எவ்வளவு என்று தெரியாது. சீதனம் ஒன்றரை கோடி ரூபா பணம், ஒரு 

கோடிரூபா பெறுமதியான வீடு, திருநெல்வேலியில், 150 பவுண், ஒரு பவுணின் விலை ஒரு லட்சம் வரை தற்போது. கணவனால் மேலதிக சீதனம் கேட்டு வற்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டார். வயது 30. இதென்ன பெண்ணாதிக்கமா?? இது விதிவிலக்காக நடக்கும் சம்பவம் என்று பிதட்ட வேண்டாம். 

 ராம் ராம் : இது சாதிப் பிரச்சினை கிடையாது இது பேராசை இதை சாதிப் பிரச்சனையாக ஒரு சில காட்டிக்கொள்கிறார்கள் சரி சரி அப்படித்தான் சாதி பிரச்சினை இருந்தாலும் அதை சீர்திருத்துவது வடக்கிலுள்ள மக்கள் அதற்கு யாரும் வாடகைக்கு  வரவேண்டியது கிடையாது இங்கே உள்ளவர்கள் அதை பார்த்துக்கொள்வார்கள் தமிழ்நாட்டில் எந்த சாதி ஒழிந்து விட்டதா சமத்துவ நிலை நாட்டப்பட்டுள்ளத.

Rajh Selvapathi : இந்த பிரச்சினையில் பெரியார் என்ன செய்வார்? அவனை விட்டு இன்னொருத்தியின் கணவனுடன் ஓடிப்போ என்பார். அவ்வளவுதானே? ஏ. பகலவன் : முதுகெலும்பு இல்லாத ஆண் கோழைகளைப் பார்த்து சிரித்திருப்பார். 

 Rajh Selvapathi : இல்லை இந்த குடும்ப பிரச்சினையில் பெரியாரு என்னதான் செய்வார். அதை கூறுங்களேன். எந்த ஒரு பெரியார் வாதியாவது ஒழுக்கமான வாழ்கை வாழ்ந்திருக்கின்றார்களா? 

 ஏ. பகலவன் : நான் பெரியார்வாதியல்ல. அவரது ஏராளமான கட்டுரைகளை படித்திருக்கிறேன்.அம்பேத்கர் உட்பட. பெரியார்வாதிகளின் ஒழுக்கம் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் பெரியாரின் ஒட்டுமொத்த கருத்துகளையும் எடுத்த எடுப்பிலேயே புறந்தள்ளி விட முடியாது. 

 Rajh Selvapathi : அற்காக அவரை ஒரு பெரும் தத்துவவியலாளார் என்று சித்தரிப்பதை எல்லாம் ஏற்க முடியாது. ஈவேரா ஒரு ஈரவெங்காயம்.

ஏ. பகலவன் : ஈரவெங்காயம் இறுதியானதன்று. இதன் மூலம் பெண்களுக்கு நான் கூறும் ஆலோசனை. ஈழத்து பெண்கள் திருமணம் முடிப்பதற்கு முன்பும், வேலை கிடைத்த பின்பும் பெரியாரை நன்கு ஆழ்ந்து படியுங்கள் படியுங்கள். உண்மையான ஈரவெங்காயங்கள் சீதனம் பெற்று சாதகம் பார்த்து திருமணம் செய்யும் அலித்தனமான ஆண்கள் இன்றும் நமது சமூகத்தில் உள்ளனர். இவர்களோடு வாழ்வதற்கு முன் பெரியார், அம்பேத்கரை படியுங்கள். உங்கள் வாழ்வில் உறுதித் தன்மை, தெளிவு பிறக்கும். தற்கொலை செய்ய மாட்டீர்கள். இது எனது ஆலோசனை மட்டுமே. 

 Kajatheepan Murukesu : பெரியாரின் கொள்கைகளை பெரியாரிஸ்டுக்களே கணக்கில எடுக்கிறதில்லையே. ஊருக்கு தான் உபதேசம்...

 Kanapathippillai Aneethan : இது புலிகள் பிற்ந்த மண் எல்லாம்.அவர்கள் கற்று கொடுத்துவிட்டு தான் சென்றார்கள் ஈர்வெங்காயம் எமக்கு தேவை இல்ல 

 

Yoga Valavan Thiya : மிகவும் கவலைக்குரிய விடயம். இப்போதெல்லாம், புலி எதிர்பு பேசிய பலர் பாசிஸ்டுகளாக மாற்று கருத்தாளர்களின் குரல் வளையை நசுக்குகின்றனர். இரு தினங்களுக்கு முன்னர் இவரது பதிவிலேயே ஒரு பெண்மணி வந்து புலம் பெயர்ந்த நாட்டில் இருந்து கொண்டு நான் இலங்கை அரசியல் பேச கூடாது என்று இடிந்துரைத்தார். இத்தனைக்கும் தம்பியை நான் கேட்டது கிழக்கு மாகாண  தொல்லியல் செயலணியில் ஏற்கனவே நியமிக்கபட்டுள்ள இராணுவ அதிகாரிகள் பெளத்த பிக்குகள் தொல்லியல் நிபுணர்களா என்றதையே.. ... இத்தனைக்கும் அவருக்கு என்னை நன்கு தெரியும்.எனது கடந்த காலவரலாறும் தெரியும், இலங்கையில் இன நல்லிணக்கத்துக்காக பாடுபடுபவன் என்பதும் தெரியும். அப்படி இருந்தும் அவர் என்னை இலங்கை அரசியல பேசாதே என்றதும், எனது குரல் வளையை நசுக்க அவர் முற்பட்டதும் எனக்கு கடந்த 3 நாட்களாக பெரும் மன உளைச்சலை தந்து கொண்டிருக்கின்றது. அவரிடம் இருந்து இவ்வகை தடையை நான் எதிர்பார்கவே இல்லை. இத்தனைக்கும் நான் இரட்டை குடியுரிமை உள்ளவன். 

புலிகள் பலமாக இருந்த காலத்திலேயே புலிகளின் ஜனநாயக விரோத செயற்பாடுகளை கண்டித்து வந்தவன். இப்படியான செயற்பாடுகளில் இருந்து நான் புரிந்து கொள்வது, மாற்று கருத்துக்களை சகித்து கொள்ள முடியாத பாசிச மனப்பான்மை இலங்கை தமிழர்களின் மனதில் ஆழ வேரூண்டி உள்ளதென்பதையே. ஆண்கள், பெண்கள், புலி ஆதரவாளர்கள், எதிர்பாளர்கள் எவரிடமும் வித்தியாசம் இல்லை. ஆழ்மனதில் பாசிச சிந்தனை வேரூண்டி உள்ளது..

 Annesley Ratnasingham : பெரியார் ஒரு மிக சிறந்த சிந்தனைவாதி ...தமிழகத்தில்பல மாற்றங்களை கொண்டுவர காரணமானவர் .. . ..ஆனால் ...இன்று இருக்கும் பெரியாரிஸ்ட்டுகள் பச்சை கள்ளர்கள் .. . .பெரியாரின் பெயரை வைத்து புழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். 

Chandru Siva : விடுங்க ராஜ் பெரியார் பேத்திகள் சொந்த அப்பாவை திருமணம் செய்து பெரியாரை மிஞ்சி நிற்பார்கள்.

 Chittibabu : பெரியார் சொந்த பிள்ளையை திருமணம் செய்தாரா?இது என்ன புரிதல்? அவர் 70வயதில் ஏன் திருமணம் செய்தார் ?என்பது நீங்கள் பெரியாரை படித்தால் விளங்கும்.. 1 · 

Ganeshalingam Kanapathipillai : பெரியார் செய்த அந்த புரட்சிகரமான விடயத்தை சேறுபூசுகிறீர்கள் ஏன்?பேத்தியை கல்யாணம் செய்ததுதான் உங்களுக்கு தெரியுமா?அங்கு உள்ள சீதனக்கொடுமை அறிவீர்களா? திருமணம் என்றால் என்ன பாலியல் மட்டுமா? பெரியார் செய்த புரட்சிகரத்திருமணம் அது உங்களைப்போன்றவர்களுக்கு உறைக்க வேண்டுமெனவே அதனைச் செய்தார்..

கருத்துகள் இல்லை: