ஞாயிறு, 8 மார்ச், 2020

அன்னை மணியம்மையார் .. மகளிர் தின வாழ்த்துக்கள்... நினைவு பதிவு

யாழ் மொழி : மார்ச் 8, 1957 அன்று அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்திற்காக ர்ந்தாலும் உடலை வாங்காமல் போவதில்லை எனச் சூளுரைத்துவிட்டு, மறு நொடியே சென்னைக்குப் புறப்பட்டுச் சென்று முதலமைச்சர் காமராசர், உள்துறை அமைச்சர் பக்தவத்சலம், சிறை மேலதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்துத் தேவையான கட்டளைகள் பிறப்பிக்குமாறு செய்தார்.
மணியம்மையாரின் தீவிர முயற்சிக்குப் பிறகு, புதைத்த உடலை அதிகாரிகள் ஒப்படைத்தனர். தோழர்களின் உடல்கள் திருச்சி பெரியார் மாளிகையில் மக்கள் மரியாதை செலுத்தும் வகையில் பார்வைக்கு வைக்கப்பட்டன. 

அவர் தலைமையில் ஊர்வலம் பிரம்மாண்டமாக காந்தியடிகள் கடைவீதி, பெரிய கடைவீதி வழியாகச் செல்ல முயன்றபோது காவல் துறை அலுவலர்கள்இந்த வழியாகச் செல்லக் கூடாது என்று தடுத்தனர். 
அம்மா அதற்கு இசையவில்லை. எல்லோரும் அப்படியே உட்காருங்கள் என்றார். எல்லோரும் ரோட்டில் அமர்ந்துவிட்டனர். அதன் பிறகு, காவல் துறை அதிகாரிகள் தடுக்கவில்லை. நேரடியாக, ஜாதி ஒழிப்புப் போராளிகளின் உடல்களை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லாமல் கடைவீதி வழியாகப் பல்லாயிரக்கணக்கான மக்களின் பார்வைக்கு எடுத்துச் சென்று மரியாதை செய்த நிகழ்ச்சி, மணியம்மையார் எப்படிப்பட்ட வீராங்கனை என்பதையும், தலைமை தாங்கும் தனிப் பண்பு அவருக்கு உண்டு என்பதையும் அந்த இக்கட்டான நிலையை அவர் சமாளித்த விதமே காட்டுகிறது

சிறையில் அடைக்கப்பட்டிருந்த பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகியோர் சிறை அதிகாரிகளின் கொடுமைக்கு ஆளாகி சிறையில் மாண்டனர். அவர்களில் வெள்ளைச்சாமியின் சடலத்தை வெளியே தருவதற்கு இசைந்த சிறை அதிகாரிகள் இராமசாமியின் சடலத்தை ஒப்படைக்க மறுத்து, சிறையியிலேயே புதைத்துவிட்டனர். சென்னையிலிருந்து திருச்சி வந்து, சிறை அதிகாரிகளைச் சந்தித்து மணியம்மையார் கேட்டும், அவர்கள் விடாப்பிடியாக சடலத்தைத் தர மறுத்தனர். என்ன நே

கருத்துகள் இல்லை: