ஞாயிறு, 8 மார்ச், 2020

கேரளாவில் ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ..: இந்தியாவில் வைரஸ் தாக்குதல் எண்ணிக்கை 39-ஆக அதிகரிப்பு

தினகரன் : திருவனந்தபுரம்: கேரளாவில் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் மூலம் கொரோனா வைரஸ் தாக்கிய நபர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவிய நிலையில் கடந்த மாதம் இந்த வைரஸ் கேரளாவிலும் பரவியது. கேரளாவில் மூன்று பேருக்கு இந்த வைரஸ் பரவியது. இந்தியாவில் முதலில் கேரளாவில்தான் கொரோனா வைரஸ் தாக்கியது. கேரளாவில் திருச்சூரை சேர்ந்த மாணவிக்கும், இன்னொரு மாணவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து தமிழர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன்மூலம் தமிழகத்தில் முதல் கொரோனா தொற்று ஏற்பட்ட நபர் இவர்தான். 45 வயதாகும் இவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. தற்போது இவருக்கு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தனிமைப்படுத்தபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிப்ரவரி மாதம் கடைசியில்தான் சென்னையிலிருந்து ஓமனுக்குச் சென்றுள்ளார். மீண்டும் சென்னை திரும்பியவர் காய்ச்சல் மற்றும் இருமல் தொடர்பான புகார்களுடன் மார்ச் 5-ம் தேதி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் கேரளாவில் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் மூலம் கொரோனா வைரஸ் தாக்கிய நபர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. பத்தினம்திட்டாவில் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. 5 பேரில் 3 பேர் இத்தாலியில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.ஏற்கனவே 3 பேருக்கு கேரளாவில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு குணப்படுத்தப்பட்டது. தற்போது கூடுதலாக ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் தனி அறையில் வைத்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா இதனால் தீவிரமாக பணிகளை முடிக்கிவிட்டுள்ளார்

1 கருத்து:

Earn Staying Home சொன்னது…

கொரோனா கொடியது.