செவ்வாய், 15 அக்டோபர், 2019

நோபல் பரிசு பெற்ற அபிஜித் : இந்திய பொருளாதாரம் மிகவும் மோசமாக உள்ளது


மதவாத எதிர்ப்பு பிரச்சாரம் : இந்தியப் பொருளாதாரம் எப்படி இருக்கிறது?
பொருளாதார நோபல் பரிசு பெற்றவர் சொல்வது என்ன?
அரசுக்கு பயப்படாமல் உண்மையைச் சொல்வோர் பட்டியிலில் நேற்று நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியும் சேர்ந்துள்ளார்.
அவரின் கருத்துகள் :
1.இந்தியப் பொருளாதாரம் மிகவும் மோசமாக உள்ளது. மீட்சி ஏற்பட நீண்ட காலம் பிடிக்கும்.
2. கடந்த சில வருடங்களில் நாம் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த மந்த நிலையின் தாக்கத்தை குறைத்திருக்கலாம்.
3.பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளார். இதனால், ஏழை தொழிலாளிகள்தான் பாதிக்கப்படுவர் என்றார். (இவருடன் நோபல் பரிசு பெற்ற இவரின் துணைவியார் டஃப்ளோவும் அதனை கடுமையாக விமர்சித்துள்ளார்.
4.பானர்ஜி மற்றம் டஃப்ளோ இருவரும் இதர 106 அறிஞர்களோடு இணைந்து புள்ளிவிவரங்களில் அரசு தலையீடு குறித்து கவலை தெரிவித்த கடிதத்தில் கையெழுத்து இட்டுள்ளனர்.
இதனை உதாசீனப்படுத்திய அன்றைய நிதி மந்திரி, இவர்களை "பொருளாதாரவாதிகள் போன்ற சிலர்(purported Economists)” என்றும், ”எதற்கெடுத்தாலும் முரண்படுபவர்கள் (compulsive contrarians)” கிண்டலடித்தார்.
தேர்தல்கள் சிறுபான்மை வெறுப்பை விதைத்து வெற்றி பெரும் கலையில் பாஜக-ஆர்.எஸ்.எஸ். கைதேர்ந்து விட்ட நிலையில், காஷ்மீர் பிரச்னை குறித்து விவாதிப்பதே தேர்தல் என்ற நிலையில் மகராஷ்ட்ராவில் பாஜக பெரும் வெற்றி பெறுமாம்!

கருத்துகள் இல்லை: