vikatan.com - -sathya-gopalan :
நடந்துமுடிந்துள்ள இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தலில்,
300-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைபற்றி, தனிப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க
இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. இதில், ராகுல் தலைமையிலான காங்கிரஸ்
கூட்டணி 90 இடங்கள் வரை கைப்பற்றியுள்ளது. அதேபோல, மற்ற கட்சிகள்100
இடங்கள் வரை கைப்பற்றியுள்ளன.அங்குள்ள 20 தொகுதிகளில், காங்கிரஸ் கூட்டணி 19 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
கேரளாவில் ராகுல் காந்தி மூன்று நாள்கள் மட்டுமே சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். ஆனால், அந்த மூன்று நாள்களில் கேரள மக்களை தன் பக்கம் சாய்க்கும் அனைத்து வேலைகளையும் கண கச்சிதமாகச் செய்து முடித்தார். சிறு சிறு திறமையாளர்கள், மக்கள் எனப் பலரையும் நேரில் சந்தித்து பாராட்டினார். இதுவே, மக்கள் மனதில் ராகுல் பதிய முக்கியக் காரணமாக இருந்தது.
இது மட்டுமில்லாது, கடந்த வருடத்தில் சபரி மலை தீர்ப்பு வெளியான பிறகு அங்கு பெரும் கலவரங்கள் வெடித்தன. இதனால், அந்தத் தொகுதியில் பா.ஜ.க வெற்றி பெறும் எனக் கூறப்பட்ட நிலையில், அவை அனைத்தையும் உடைத்து காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளனர். கேரளாவில், காங்கிரஸ் அழுத்தமாகக் கால் பதித்ததற்கு ராகுலின் பிரவேசமே காரணம் என கட்சி தரப்பிலிருந்து கூறப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக