செவ்வாய், 21 மே, 2019

பங்கு சந்தை ஓநாய்களும் பாஜகவும் சேர்ந்து விளையாடிய எக்சிட் கருத்து கணிப்பு


Karthick Ramasamy : கருத்துக்கணிப்புகளை நம்பி ஏமாந்து பங்குகளை அதிக விலைக்கு வாங்குவது சில்லறை முதலீட்டாளர்கள்.
ஆக இன்று அதிக விலைக்கு விற்பது பங்குச்சந்தை முதலைகள்.
இன்னும் சில தினங்களில் உண்மையான தேர்தல் முடிவு வரும்போது இதே பங்குகளின் விலை வீழ்ச்சியடையும்.
அன்று அதே பங்குகளை நஷ்டத்தைக் குறைக்க குறைந்த விலைக்கு விற்கப்போவது சில்லறை முதலீட்டாளர்கள்.
அன்று திரும்ப இதே பங்குகளைத் தாங்கள் விற்றதைவிட 20% குறைந்த விலைக்கு இந்த பங்குச்சந்தை முதலைகள் மீண்டும் வாங்கிவிடுவார்கள்.
இரண்டு நிகழ்விலும் லாபமடையப்போவது ஒரே ஆட்கள் தான்.
ஏன் தொடர்ந்து பல பொதுத்தேர்தல்களில் கருத்துக் கணிப்பு முடிவுகள் தவறாகவே வருகின்றன என்பதை யோசித்துப் பார்த்தால் உங்களுக்கு இந்த விளையாட்டு புரியும்.

கருத்துகள் இல்லை: