வியாழன், 24 ஜனவரி, 2019

திருச்சியை திக்குமுக்காட வைத்த தேசம் காப்போம் ஆன்டி இந்தியன்கள்... வீடியோ


nakkheeran.in - ஜெ.டி.ஆர். : திருச்சியில் ஜி.கார்னர் பொன்மலை இரயில்வே மைதானத்தில் சனாதன பயங்கரவாதத்தை எதிர்த்து தேசம் காப்போம் மாநாடு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நீண்ட காலம் திட்டம் என்றாலும், அனுமதி கிடைப்பதில் சிக்கல் தொடர்ந்து கொண்டே இருந்த நிலையில் திடீர் அனுமதிக்கு பிறகு குறைந்த நாளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டிற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சி.பி.ஐ.(எம்) பொதுசெயலாளர் சீத்தாராம்யெச்சூரி, சி.பி.ஐ. பொதுசெயலாளர் ராஜா, புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் வீரமணி, சி.பி.ஐ(எம்) மாநில பொதுசெயலாளர் கே.பாலகிருஷ்ணன், காங்கிரஸ் முன்னால் மத்திய அமைச்சர் கொடிக்குனில் சுரேஷ், சி.பி.ஐ. பொதுசெயலாளர் சுதாகர் ரெட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுகரசர், இந்தியன் மூஸ்லீம்லீக் தேசிய தலைவர் காதர்மொஹிதீன், மனிதநேயமக்கள்கட்சி தலைவர் பேராசிரியர் ஜவஹிருல்லா, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு உரை ஆற்றினார்கள்.
தமிழகம் முழுவதும் இருந்து விடுதலைசிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொண்டர்கள், குடும்பம் குடும்பமாக, பெரும்பாலும் இளைஞர்கள் கூட்டமாக மிக பிரமாண்டமான அந்த ஜி.கார்னர் மைதானத்தில் பெரிய அரசியல் கட்சிகளே திண்டாடி போவார்கள்.
8 வருடங்களுக்கு முன்பு ஜெ. நடத்தின கண்டன ஆர்பாட்டத்திற்கு தமிழகம் முழுவதும் திரண்டு திருச்சியை திணரடித்து ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுத்தது. அதன் பிறகு இந்த தற்போது நடத்திய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு கூட்டமே இல்லாமல் பரிதாபமாக இருந்தது.
திமுக நடத்திய பொதுக்கூட்டம் பெரிய அளவில் கூட்டத்தை திரட்டியிருந்தனர். ஆனால் அதன் பிறகு மோடி நடத்திய போதுகூட்டத்தை காண்பிப்பதற்கு பெரும்பாடு பட்டனர். அதன் பிறகு தற்போது நடந்து வருகிற தேசம் காப்போம் என்கிற பெயரில் நடக்கிற இந்த பொது கூட்டத்திற்கு திரண்ட கூட்டம்தான் தற்போது திருச்சியை திக்குமுக்காட வைத்துயிருக்கிறது. தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை தேசிய நெடுஞ்சாலைகள் எல்லாம் வாகன நெரிசலில் திக்குமுக்காடி கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை: