வெள்ளி, 9 நவம்பர், 2018

வேலூரை உலுக்கிய கொலை .. நைட்டியுடன் பிணமாக மிதந்த அனிதா..

சதுப்பேரி tamil.oneindia.com - hemavandhana.:வேலூர்: கணவனையும், பெத்த 3 குழந்தைகளையும் மறந்துபோய் அனிதா செய்த காரியம்தான் இன்று அவரது உயிரையே எடுத்துவிட்டது!!
அனிதா!! சிஎம்சி ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்க்கிறார். இவரது கணவர் கதிரேசன். கீழ்மொணவூர் திருமால் நகர் டேங்க் தெருவில்தான இவர்கள் குடியிருக்கிறார்கள். இவர்களுக்கு கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆகிறது. 2 மகன்கள், ஒரு மகள் என 3 குழந்தைகள் இருக்கின்றனர்.
சதுப்பேரி இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அனிதாவை காணவில்லை. எல்லா இடங்களிலும் கதிரேசன் தேடினார்.
எங்கேயுமே அனிதா இல்லாததால் போலீசில் புகார் செய்தார். போலீசாரும் விரைந்து அனிதாவை தேடினார்கள். இதனிடையே நேற்று காலை சதுப்பேரி ஏரியில் பெண்ணின் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது.

அதனால் போலீசார் ஏரிக்கரைக்கு ஓடினார்கள். நைட்டியில் அனிதா நைட்டியில் அனிதா அங்கு சடலத்தை மீட்டு பார்த்தால், அது காணாமல் போன அனிதா என்று தெரியவந்தது. நைட்டி அணிந்திருந்த அனிதாவின் வாயிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. முகத்திலும் நிறைய காயங்கள் இருந்தன. இதையடுத்து போலீசார் இது சம்பந்தமான விசாரணையை கையில் எடுத்து, இவ்வளவு மோசமாக அடித்து உதைத்து அனிதாவை கொன்றது யார் என விசாரித்தனர்.

ர் அப்போதுதான் அனிதாவின் கள்ளக்காதல் சமாச்சாரம் வெளிப்பட்டது. அதில், 28 வயதான அனிதாவுக்கும் அஜீத்குமார் என்ற இளைஞருக்கும் காதல் பத்தி கொண்டது. ஆரம்பத்தில் வெறும் ஃப்ரண்ட்ஷிப் என்றார்கள்... பிறகுதான் அது கள்ளக்காதலாக உருமாறி... வீட்டில் தகராறு வெடிக்கும் அளவுக்கு போய் விட்டது. அஜீத்குமாருடன் ஏற்பட்ட உறவை கதிரேசன் கண்டித்தார். அனிதா கேட்கவில்லை. அது நாள்தோறும் பிரச்சனையானது.

 3 குழந்தைகளை வைத்து கொண்டு செய்யக்கூடிய காரியமா என்று கதிரேசன் அனிதாவிடம் அறிவுறுத்தி கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில் அனிதா மனசு மாறினார். இனிமேல் அஜித்குமாருடன் பேசக்கூடாது என முடிவெடுத்தார். அதற்காக அஜித்குமார் போன் செய்தாலும் அதை எடுக்காமல் தடுத்தார். எத்தனை முறை போன் போட்டாலும் அனிதா போன் எடுக்காததால் அஜித்குமாருக்கு கோபம் சுர்ரென்று ஏறியது.

அதனால் இந்த விஷயத்தை அனிதாவிடமே கேட்டுவிடலாம் என்று முடிவெடுத்து, வீட்டுக்கே போய்விட்டார். ஏன் என்னிடம் முன்னே மாதிரி பேசுவதில்லை? ஏன் என் போனை அட்டெண்ட் பண்றது இல்லை? என்று கேட்டு தகராறு செய்தார். ஆனால் வீட்டில் அனிதாவால் எதுவுமே பதில் சொல்ல முடியவில்லை. எனக்கு ஒரு பதில் தெரிஞ்சே ஆகணும்னு சொல்லி, அனிதாவை கட்டாயப்படுத்தி தனியாக பேச வேண்டும் என்று கூறி பைக்கில் அழைத்து வந்தார் அஜித்குமார்.

 பிறகுதான் மறுநாள் காலையில் பிணமாக அனிதா ஏரியில் மிதந்தார். எனவே இவர்கள் ரெண்டு பேரும் என்ன பேசினார்கள், சண்டை, தகராறு எப்படி வந்தது? என தெரியவில்லை. ஆனால் கள்ளக்காதல் தகராறில் கொலை செய்து அஜித்குமார் ஏரியில் வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இப்போது அஜித்குமார் எஸ்கேப்!! ஆள் எங்கே என்று தெரியவில்லை. அதனால் தனிப்படை ஒன்றினை அமைத்து அஜித்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: