புதன், 7 நவம்பர், 2018

திராவிட கருத்தியல் மீது போர்தொடுத்த மாறன் சகோதரகள் ... பார்ப்பன பாம்புகள்!

Saravanaperumal Perumal : அதாவது சர்க்கார் படம் சொல்லுற ஊழல் லஞ்சம்
என்றால் என்ன தெரியுமா பாஸ்..
நம்ம புள்ளைங்க ஸ்கூல் போக கொடுத்த சைக்கிள், புக், யூனிபார்ம்,
அப்புறம் பக்கத்து வீட்ல கொஞ்சம் சட்னி அரச்சுக்கிறவா, மாவு ஆட்டிக்கிறவா என்று நம் வீட்டு பெண்கள் கெஞ்சுவதை தவிர்த்து சொந்தமா வீட்லயே எல்லாமே கிடைக்க வைத்தது,
மாசம் 6000 ரூ சம்பளம் வாங்குறவன் வீட்டுப் புள்ளைங்க, பக்கத்து வீட்டு ஜன்னல் வழியா எட்டிப் பார்த்து டி.வி பார்த்திட்டு, அப்பா நம்ம வீட்டுக்கு எப்ப டி.வி வாங்குவிங்க என்று கேட்ட நிலையில், வீட்டுக்கு ஒரு டி.வி கொடுத்தது.
காலம் காலமா பொதி மூட்ட சுமந்த பிள்ளைக்கு, லேப்டாப் கொடுத்து இணைய கல்வி வழங்கியது.
அப்புறம் நம்ம வீட்டு பெண்கள் பஸ் ல இடிபட்டு வேலைக்கு போறத தடுத்து ஸ்கூட்டர் கொடுத்து அவங்களை எல்லாம் சுதந்திரமாக போக வைத்தது,
நம்ம வீட்டு புள்ளைங்க பட்டினி கிடக்கக் கூடாதுன்னு மதியம் விதவிதமான சாப்பாடு இலவசமாக கொடுத்தது,
அன்றாடம் 100, 200 ரூ சம்பளம் வாங்குற ஏழைகள் குறைந்த காசுல சாப்பாடு சாப்பிட உணவகம் திறந்தது,
ஏழைங்க வீட்ல கஞ்சியும், கேப்பக் கூழும் சாப்பிட்ட இடத்தில, 35 கிலோ அரிசி இலவசமாக கொடுத்தது,

12 வது வரை இலவசமாக கல்வி கொடுத்தது,
விவசாயம் செய்பவர்களுக்கு கரண்ட் இலவசமாக கொடுத்தது,
இப்படி எல்லாத்தையும் இலவசமா கொடுத்து கொடுத்து தான் நாட்டையே சீரழித்து வைத்துள்ளார்கள். இவங்களுக்கெல்லாம் இப்படி மக்கள் பணத்தை வாரி வாரி இரைக்கிற நால தான், நாடே முன்னேறாம கிடக்குது. பணக்காரன் மாதிரி வாழ இவனுங்க ஏன் ஆசைப்படனும்? எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கிறது "மனுதர்மம்" கிடையாது. இதாங்க லஞ்சம். இதான் ஊழல்.
ஆனால் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு கோடி கோடியா தரப்படும் மானியம், வரிச்சலுகை எல்லாம் மக்கள் வரிப்பணம் தான். ஆனால் அதல்லாம் நாட்டின் வளர்ச்சிங்க. அவங்களுக்கு இன்னும் கொடுக்கணும்ங்க.
பார்ப்பன RSS ஜெயமோகன் எழுதிய Sorry திருடிய கதையில் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? ஏழைகள் படிப்பதும், அவர்கள் வீட்டில் எல்லா பொருட்களும் இருப்பதும் அவர்களின் தேவையாக தெரியாது, ஆடம்பரமாகவே தெரியும் இந்த பார்ப்பனர்களுக்கு.
அதான் திராவிட ஆட்சிக்கு எதிராக சர்க்காரை தயாரித்துள்ளது பார்ப்பனியம்.
ஏன்டா கள்ள ஓட்டு மற்றும் டாஸ்மாக் எதிரா பேசு தப்பில்ல. ஆனால் பணக்காரனுக்கு கொடுத்தா வளர்ச்சி, ஏழைக்கு கொடுத்தா இலவசம். மக்கள் வரிப்பணம் வீணாகுதுன்னு சொல்ற பாத்தியா? உன்ன மாதிரி அயோக்கிய சிந்தனை யாருக்கும் வராது. இதாங்க இவனுங்களோட மாற்றம், புரட்சி. இதான் சர்க்கார். அயோக்கிய பயலுக..
யாசிர்

கருத்துகள் இல்லை: