புதன், 7 நவம்பர், 2018

கர்நாடகாவில் அடித்து தூள் கிளப்பிய காங்கிரஸ் ம ஜ க .. பாஜகவின் கோட்டை பெல்லாரி தூள்

Swathi K : கர்நாடகாவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 5 இடங்களில் 4
இடங்களில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா கூட்டணி வெற்றி. 1 இடத்தில் மட்டும் பிஜேபி வெற்றி. பிஜேபியின் தோல்வியில் மகிழ்ச்சி..
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை 3 மக்களவை தொகுதிகள்.. இதில் இரண்டு இடங்களில் 2014ல் பிஜேபி மாபெரும் வெற்றி பெற்று இருந்தது, ஒன்றில் ம.ஜனதா வெற்றி பெற்றிருந்தது.. பிஜேபி தான் வெற்றி பெற்ற ஒன்றில் தோற்றுவிட்டது.. மற்றுமொரு தொகுதியில் மிக குறைந்த வாக்குகளில் வெற்றி.. ம.ஜனதா கட்சி தன்னோட தொகுதியை முன்னை விட மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி..
1. பெல்லாரி (மக்களவை) - இந்தியாவில் அதிக ஊழல் நடைபெறும் தொகுதி.. பிஜேபியின் சுரங்கதொழில் மாபியா கூட்டம் ரெட்டி சகோதர்கள் கையில் இருந்த கோட்டை.. 2014ல் 1.1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிஜேபி இப்போது 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி..
2. மாண்டியா (மக்களவை) - ம.ஜனதாதள கோட்டை.. 2014ல் அவர்கள் தான் வெற்றி.. இப்போதும் வெற்றி.. சென்றமுறை 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.. இந்த முறை 3.3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
3. சிமோகா (மக்களவை) - 2014ல் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிஜேபி வெற்றி பெற்று இருந்தது.. எடியூரப்பாவின் கோட்டை.. 2014ல் 3.5 லட்சம் ஓட்டு வித்தியாத்தில் வெற்றி பெற்ற பிஜேபி இப்போது வெறும் 47,000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி..

4. ராமநகரா (சட்டசபை) - 1.1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி மனைவி வெற்றி. இங்கு 2018ல் குமாரசாமி வெற்றி பெற்று பின்னர் ராஜினாமா செய்தார்.
5. ஜம்கன்டி (சட்டசபை) - 40,000 ஓட்டுகளில் காங்கிரஸ் வெற்றி. 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தான் வெற்றி பெற்றது.. அந்த MLA விபத்தில் இறந்ததால் இடைத்தேர்தல்..
**இந்த ஐந்து இடங்களில் மட்டும் சென்றமுறை பிஜேபிக்கு ஓட்டு போட்ட கிட்டத்தட்ட 8.7 லட்சம் மக்கள் இப்போது காங்கிரஸ்/ ம.ஜனதா விற்கு வோட்டு போட்டு வெற்றி பெற வைத்துள்ளார்கள்..
**தென் மாநிலங்களில் பிஜேபி கால் பதித்த ஒரே மாநிலம் கர்நாடகா.. 2014ல் 28 தொகுதிகளில் 17 இடங்களில் பிஜேபி வெற்றி பெற்றது.. 2019ல் 10 இடங்களில் கூட பிஜேபி வெற்றி பெற முடியாது..
**இது பிஜேபிக்கு மாபெரும் அடி.. இது தான் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம் என்று எல்லா இடைத்தேர்தலிலும் நடந்தது.. ஆனால் யோசித்து பாருங்கள்.. 2015ல் இருந்து நடைபெற்ற இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் கிட்டதட்ட 85% இடங்களில் பிஜேபி தோல்வியை தான் கண்டுள்ளது.. ஆனால் எப்படி பெரிய அளவில் நடக்கும் சட்டசபை தேர்தலில் மட்டும் வெற்றி பெற முடிகிறது?? ஒவ்வொரு சட்டசபை தேர்தலுக்கு புதிதாக வாங்கும் ஓட்டு எந்திரத்தில் சாப்ட்வேர் ப்ரோக்ராமில் எதாவது கோல்மால் செய்கிறார்களா?? ஒன்றும் புரியவில்லை... ஆனால் ஏதோ கோல்மால் செய்கிறார்கள்.. எதிர்கட்சிகள் கவனமாக இல்லையென்றால் EVM மூலம் பிஜேபி தனக்கு தேவையான தேர்தலில் மட்டும் வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது..
**வெற்றி பிஜேபிக்கு திமிரையும், தோல்விகள் அதிகமான கிரிமினல்தனத்தையும் கொடுக்கும்.. எதிர்க்கட்சிகள் கவனமாக இருக்கவேண்டிய நேரமிது!!
இணைப்பு: EVM கோல்மால் பற்றி குஜராத் தேர்தலுக்கு முன்பே நான் எழுதிய கட்டுரை கமெண்ட்டில் உள்ளது.. படித்து செல்லவும்.. இது தான் நடக்கிறது என்று சொல்லவில்லை.. ஆனால் இது போன்ற ஏதோ ஒரு கோல்மால் நடந்துகொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது..

கருத்துகள் இல்லை: