சனி, 10 நவம்பர், 2018

அரசு கொடுத்த இலவச பொருட்களை உடைத்து போட்ட சர்க்கார் பட ரசிகர்கள்

மக்களுக்கு எந்த நன்மையையும் செய்ய வக்கில்லாத பொறிக்கி சினிமா நடிகர்கள் அரசாங்கம் கொடுத்த இலவச மடி கணினிகளை உடைத்து நொறுக்கும் ஒரு சமுகவிரோதிகளாக இளையோரை உருவாக்கி விட்டுள்ளார்கள் .
நேற்றுவரை அரிவாளும் கையுமாக அலைகின்றானே ?
துரத்தி தூரத்தின் பெண்களின் பின்னால் ஓடிகின்றானே என்றெல்லாம் கவலைப்பட்ட மக்களுக்கு ,
அதையெல்லாம் தாண்டி ஒரு லாப்டாப் ஐ உடைக்கும் மிருகங்களாக ரசிகர்கள் என்ற ஒரு முழு முட்டாள் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்கள் நடிகர் விஜய் முருகதாஸ் ஜெயமோகன்  ஆகியோர் .
இவர்களை ஏன் இன்னும் தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யவில்லை என்பதுதான் கேள்வியே!
தமிழக அரசு கொடுத்த இலவச லாப்டாப் என்பது ஒரு நூலகம் போன்றது . நீ அதன்மூலம் படித்து உலகை அறிவதற்காகவும் நீ வாழ்வில் முன்னேறுவதற்காக மக்களின் வரிப்பணத்தில் இருந்து வாங்கி உனக்கு வழங்கபட்டது .
இந்த சினிமாக்காரர்களின் இந்த மோசடிகளுக்கு பின்னால் இருப்பது பாஜகதான் என்பதில் கடுகளவு சந்தேகமும் கிடையாது .
இவர்கள் மீது ஏராளமான கறுப்புப்பண மோசடிகள் இருக்கின்றன.
இந்த கறுப்புப்பண குற்றமும் சினிமாக்காரர்களும் எப்பொழுதும் இரட்டை குழந்தைகள்தான் .


குடிசைகளில் இருந்து குழந்தைகளை இலவச பேருந்து பாஸ் கொடுத்து இலவச சைக்கிள் கொடுத்து இலவச யுனிர்போரம் கொடுத்து இலவச புத்தகம் கொடுத்து இலவச லாப்டாப் கொடுத்து இலவச சாப்பாடும் கொடுத்து அவர்களை டாக்டர்கள் எஞ்சியர்கள் தொழித்துறை விற்பன்னர்கள் என்று உலகம் பூரா கொடிநாட்ட வைத்தது திராவிடம் வழங்கிய சமுக நிர்மாண திட்டங்கள்தான் .
சுயசிந்தனை உள்ள ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
ஒரு லாப்டாப் என்பது ஒரு நூலகத்துக்கு இணையானது .
யாழ்ப்பாண பொதுசன  நூலகத்தை தீயிட்டு கொழுத்தியவனும் .. இந்த் முருகதாஸ் ஜெயமோகன் விஜய்யும் ஒரே மாதிரியான மன நிலை கொண்டவர்கள்தான்<

கருத்துகள் இல்லை: