செவ்வாய், 6 நவம்பர், 2018

சிவகாசி பட்டாசும் குழந்தை தொழிலாளர்களும் .. பெரும்பாலானோர் கொத்தடிமைகள் (bonded labourers).

Shalin Maria Lawrence : சிவகாசியில் பட்டாசு தொழிலில் ஈடுபட்டிருக்கும்
அனைவரும் விளிம்பு நிலை ஏழைகள்.அதில் பெரும்பாலானோர் கந்துவட்டியில் சிக்கி தவிப்பவர்கள்.
அதிலும் 50% குழந்தை தொழிலாளிகள்.அதிலும் பல பேர் வீட்டில் இருந்தே இந்த வேலையை செய்பவர்கள்.
அதிலும் பெரும்பாலானோர் கொத்தடிமைகள் (bonded labourers).
இருட்டில் வேலைக்கு போய் இருட்டில் வீட்டிற்கு செல்லுபவர்கள்.
பட்டாசு தயாரிக்கும் வேலையில் இருக்கும் 95% பேருக்கு மூச்சு தொடர்பான பிரச்சினைகள் உண்டு.குறிப்பாக நுரையீரல் தொற்று, டீபி,நுரையீரல் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
அதில் பெரும்பாலானோர் ஆயுள் சராசரி மனிதர்களை விட மிக குறைவு.
உலக தரமான எல்லா மனித உரிமை மீறல்களும் பட்டாசு தொழிலில் நடக்கிறது.
Demand =generation.
நாம் பட்டாசு வெடிப்பதை நிறுத்தி கொண்டாலே அவர்கள் வாழ்வு வேறு வகையில் உருப்படும்.
நம் சுயநலத்துக்காக மற்றவனை சாகடிப்பதை அடுத்த வருடத்தில் இருந்தவது குறைத்து கொள்ளுவோம்.<

கருத்துகள் இல்லை: