சனி, 22 செப்டம்பர், 2018

இம்ரான் கான்: பெரிய இடங்களில் சிறிய மனிதர்கள் ... மோடி மீது விமர்சனம்


dinamalar.comn :இஸ்லாமாபாத்: இந்தியா - பாக்., இடையேயான பேச்சு வார்த்தை ரத்து செய்யப்பட்டது குறித்து பாக்., பிரதமர் இம்ரான் கான் விமர்சனம் செய்துள்ளார். 3 போலீசார் கொலை
இந்தியா - பாக்., இடையே பேச்சு வார்த்தை துவங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, பாக்., பிரதமர் இம்ரான் கான் கடிதம் எழுதினார். இதையடுத்து இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், காஷ்மீரில் மூன்று போலீசாரை பயங்கரவாதிகள் கடத்தி சென்று கொடுரமாக கொலை செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு, இரு நாடுகளுக்கு இடையோன பேச்சு வார்த்தையை ரத்து செய்தது. இது குறித்து பாக்., பிரதமர் இம்ரான் கான் டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார். அதில் அவர்,' அமைதி பேச்சு வார்த்தைக்கான எனது அழைப்புக்கு இந்தியாவின் முரட்டுதனமான மற்றும் எதிர்மறை பதிலால் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளேன். எனினும், என் வாழ்நாள் முழுவதும் பெரிய பதவிகளை வகித்து வந்த சிறிய மனிதர்களை பார்த்துள்ளேன். அவர்களுக்கு தொலை நோக்கு பார்வை இல்லை' என, குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: