திங்கள், 11 டிசம்பர், 2017

ஹிட்லரின் மறுபிறவிகள்’ பாஜக மீது பிரகாஷ் ராஜ் கடும் சாடல்!


Chinniah Kasi : தேசியவாதமும் இந்துத்துவமும் ஒன்றே என்று கூறியிருக்கும் பாஜக தலைவர்களில் ஒருவரும், மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சருமான ஆனந்த்குமாரை நடிகர்பிரகாஷ் ராஜ் கடுமையாகசாடியுள் ளார்.பாஜக அமைச்சர்கள் வெட்கமற்ற அரசியல் செய்வதாக கூறியுள்ள அவர், பாஜக-வினர் எல்லோரும் ஹிட்லரின் மறுபிறவிகளா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே, அண்மையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தேசியவாதமும் இந்துத்துவமும் தனித்தனியாக பிரித்தறிய முடியாத ஒன்றாகும்” என்றும், “இந்த உலகிலிருந்து இஸ்லாம் முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும்” என்றும் கன்னடத்தில் கூறியிருந்தார். இதை வீடியோவாகவும் அவர் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ஆனந்த குமாருக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் அடுக் கடுக்கான கேள்விகளை எழுப்பி, மிகக் கடுமையாக சாடியுள்ளார்.“நீங்கள் தேசியவாதமும் இந்துத்துவமும் ஒன்றே என்று கூறுகிறீர்கள்; மதத்தினை எதற்காக தேசியவாதத்திற்குள் கொண்டு வருகிறீர்கள்? அப்படி என்றால் இந்து அல்லாதவர்களான, ஆனால் நமது நாட்டின் பெருமைகளாக விளங்கும் அம்பேத்கர், அப்துல் கலாம், ஏ.ஆர். ரஹ்மான், குஷ்வந்த் சிங்...
என்று தொடர்ந்து கொண்டே இருக்கும் பட்டியலில் உள்ளவர்களைப் பற்றி என்ன சொல்வீர்கள்?
அதே சமயம் மதத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் மனிதத்தின் மீது மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ள என் போன்றவர்களின் கதி என்ன? அப்படியானால் நாங்கள் எல்லாரும் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா? யார் நீங்கள் எல்லாம்? உங்களது செயல் திட்டம்தான் என்ன? நீங்கள் மறுபிறவி பற்றி எல்லாம் பேசுவதால், ஹிட்லரின் மறுபிறவிகளா நீங்கள்?” என்று பிர காஷ் ராஜ் கொதித்து எழுந்துள்ளார்.“அமைச்சரின் பேச்சை மதச்சார்பற்ற நமது நாட்டின் பின்னணியில் ஆராய்ந்து, அவரின் நோக்கத்தை யும், வெட்கமற்ற அரசியலையும் தெரிந்து கொள்ளுங்கள்” என்று தனது ரசிகர்களையும் பிரகாஷ் ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: