திங்கள், 28 நவம்பர், 2016

கருப்பு கருணாவின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.. மோடி விமர்சன பதிவுகள்: தமுஎகச மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்...

karunaமு.வி.நந்தினி தமுஎகச மாநிலத் துணைப் பொதுச் செயலாளரரும் ஆவணப்பட இயக்குநருமான எஸ்.கருணாவின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கருப்புப் பண நடவடிக்கையான செலாவணி நீக்கம் எத்தகைய பாதிப்பை மக்களுக்கு ஏற்படுத்தியது என தனது பதிவுகளில் விமர்சனம் செய்து வந்தார் கருணா. இறுதியாக சேலத்தில் பாஜக பிரமுகரிடம் கைப்பற்ற ரூ. 20 லட்சம் குறித்த செய்தியை பகிர்ந்திருந்தார். கருணாவை கிட்டத்தட்ட12 ஆயிரத்து ஐநூறு பேர் பிந்தொடர்கிறார்கள். இதுகுறித்துவழக்கறிஞர் பிரதாபன் ஜெயராமன் பதிவு செய்துள்ள கருத்து:
தோழர் கருப்பு கருணா அவர்களின் முகநூல் பக்கத்தை முடக்கிய கயவர்களை கண்டிக்கிறோம். பதில் சொல்ல திறன் இல்லாமல், கருத்தை முடக்கும் இந்த செயல் கேவலமானது.
பதிவிடவும்,கருத்திடவும்,லைக் போடவும்,எவ்வித வினையாற்றவும் தடை விதிக்கப்பட்டிருக்கு…இது கருத்துரிமைக்கு எதிரானது. கருப்புகருணா< முகநூலில் பலரும் தடை நீக்கக்கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.thetimestamil.com

கருத்துகள் இல்லை: