வெள்ளி, 2 டிசம்பர், 2016

டெபிட் கார்டு ...நீங்கள்லாம் உண்மைலையே கோமாளியா? இல்ல கோமாளிமாதிரி நடிக்கிறீங்களாடா!..

கோமாளிகளுக்கு புரியாது படிக்க வேண்டாம்!
ஏன் இந்தியா மற்ற நாடுகளை போல முன்னேறக்கூடாதா?...
மக்கள் டெபிட் கார்டு, நெட்பேங்கிக்லாம் பயன்படுத்தகூடாதா?...
ஆன்லைன் பரிவர்தனைகள் வரக்கூடாதா?...
ஏன் டீக்கடைல paytym மெசின் யூஸ் பன்னகூடாதா? வளரச்சிடா! கவர்ச்சிடா! மோடிடா! (சங்கிகளின் வாய்ஸ்)

அட அரமண்டையங்களா!.. டெபிட்கார்டு பயன்படுத்துவதையும், ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் செய்வதையும் ஒரு நாட்டின் வளர்ச்சியின் அடையாளமாக உங்களுக்கு சொல்லிக்குடுத்தவன் எவன்டா?
நாட்டின் வளர்ச்சிதான் தான் நோக்கம என்றால், க்யூபா மாதிரி நாடு முழுவதும் கல்வியை இலவசமாக்கி சட்டம் இயற்று, கல்வி நிறுவனங்களை பொதுவுடைமையாக்கு, கல்வி வியாபாரத்தை 100% ஒழிக்க சட்டம் இயற்று. அது நாட்டை முன்னேற்றும்.
அரபுநாடுகள் குருடாயிலை அவர்களின் மூலதனமாக ஆக்கியது போல, இந்தியாவின் அடையாளமாகிய விவசாயத்தை மூலதனமாக்கு, விவசாய அழிவை தடுக்க சட்டம் இயற்று. அது நாட்டை முன்னேற்றும்.

பொது துறைகளில் தனியார் முதலீட்டை 100% தடை செய்து அரசின் வருமானம் முழுவதும் நாட்டிற்கே என்று சட்டம் இயற்று.
வளங்களை சுரண்டும் கோலா, கார் கம்பெனிகள் போன்ற அந்நிய முதலீடுகளை தடுத்து அதிகபட்ச FDI அளவை 10% கீழே கொண்டுவா. அதுவும் அத்தியாவசிய பொருள்களுக்கான முதலீடாக இருக்குமாறு விதிமுறைகளை உண்டாக்கு.
உற்பத்தி வரி, சேவை வரியை குறைத்து தொழில்முனைவோரை ஊக்கப்படுத்து. நாட்டின் ஏற்றுமதியை உயர்த்தி அந்நிய செலாவனியை அதிகரிக்க சட்டம் இயற்று.
சாதி, மத அரசியல்களுக்கு முற்றிலும் தடை விதித்து சட்டம் இயற்று.
ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதாவை சட்டமாக்கு.
மருத்துவத்தை பொதுத்துறையாக மாற்றி சட்டம் இயற்று.
இன்னும் எத்தனையோ வளர்ச்சி திட்டங்கள் இருக்க... 2000 ஓவாவை கொண்டுவந்தா, டெபிட் கார்டு வந்துட்டா நாடு வளர்ச்சி அடஞ்சுரும்னு கூவுறீங்களே நீங்கள்லாம் உண்மைலையே கோமாளியா? இல்ல கோமாளிமாதிரி நடிக்கிறீங்களாடா!..
#ப_பி
- Via WhatsApp

கருத்துகள் இல்லை: