சனி, 29 நவம்பர், 2014

இளங்கோவன் : மூப்பனார் காங்கிரஸ் கட்சிக்கு என்ன செய்தார் என்று தெரியவில்லை? உண்மைய சொல்லுறீங்க!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். வாசன் காங்கிரஸ் கட்சியைவிட்டு விலகி தனிக்கட்சி ஆரம்பித்துள்ள நிலையில் செய்தியாளகள் அவரிடம் கேள்வி எழுப்பினர், அப்போது பேசியஅவர்
400 கோடி கொடுத்து வாங்க வேண்டிய மின்சாரத்தை தனியாரிடம் ரூ.1400 கோடிக்கு வாங்குவதாகவும், இதற்கு யார் காரணமோ அவர்கள் மீது  தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் நடவடிக்கை எடுகக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை மோடி குறைத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். காங்கிரஸ் கட்சி மூப்பனாரை முன்னிறுத்தி செயல்படாது என்றும், அவர் காங்கிரஸ்க்கு என்ன செய்தார் என்று தனக்கு தெரியவில்லை என்றார்.dinamani.com

கருத்துகள் இல்லை: