சனி, 18 ஜனவரி, 2014

டைரக்டர் கவுதம் மேனன் மீது வழக்கு:! மோசடி செய்தல், ஏமாற்றுதல், 406, 417, 419, 426 ஆகிய பிரிவுகளின் கீழ்

விண்ணை தாண்டி வருவாயா’ என்ற திரைப்படத்தை கவுதம் மேனன் டைரக்டு செய்திருந்தார். இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜெயராமன். தமிழில் வெளிவந்த இந்த படத்தை இந்தியில் ‘‘டப்பிங்’’ செய்ய கவுதம்மேனன் முடிவு செய்தார். ‘‘ரேஷ்மா கட்டாலா’’ என்பவர் உதவியுடன் போட்டோ நிறுவனம் மூலம் டப்பிங் செய்யும் பணி நடந்தது. இந்த படத்தை இந்தியில் ‘டப்’ செய்ய வேண்டுமானால் தனக்கு ரூ.99 லட்சம் ‘ராயல்டி’ தர வேண்டும் என்று படத் தயாரிப்பாளர் ஜெயராமன் போலீசில் புகார் கொடுத்தும் ஏற்கவில்லை. இதையடுத்து சைதாப்பேட்டை கோர்ட்டின் உதவியை அவர் நாடினார். போலீசார் வழக்குபதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று மனுதாக்கல் செய்தார். அதன்பேரில் மாஜிஸ்திரேட், போலீஸ் துணை கமிஷனர் நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டார். ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கிடையில் ஜெயராமன் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார். இதையடுத்து ஐகோர்ட்டு நீதிபதி போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் ஜான் அருமைநாதன் வழக்குப்பதிவு செய்தார். இயக்குனர் கவுதம்மேனன், ரேஷ்மா கட்டாலா, ராமானுஜம், வெங்கட் சோமசுந்தரம், சசிகலா தேவி ஆகிய 5 பேர் மீது மோசடி செய்தல், ஏமாற்றுதல், 406, 417, 419, 426 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. malaimalar.com 

கருத்துகள் இல்லை: