செவ்வாய், 8 அக்டோபர், 2013

அமைச்சர் சல்மான் குர்ஷித் யாழ்பாணத்தில் வீடுகளை கையளிக்கும் நிகழ்ச்சி

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெல்லிப்பளையில் இந்திய நிதியுதவியில் புதிகாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகளை அதன் உரிமையாளர்களிடம் கையளித்தார். இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டு இருந்தார். அவர் மதியம் 1.30 மணியளவில் தெல்லிப்பளையில் இந்திய நிதியுதவியில் புதிகாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகளை அதன் உரிமையாளர்களிடம் கையளித்தார். தெல்லிப்பளை தந்தை செல்வாபுரம் கிராமசேவையாளர் பிரிவில் இந்திய நிதியுதவியில் 161 வீடுகள் நிர்மாணிக்கப்படுகிறது. அதில் 44 வீடுகள் பூர்த்தியாகும் நிலையில் உள்ளது அதில் இரு வீடுகளே முழுமையாக பூர்த்தி ஆகியுள்ளது. அவ்விரு வீடுகளுமே இன்றைய தினம் இந்திய வெளிவிவகார அமைச்சரால் கையளிக்கப்பட்டது. ஒவ்வொரு வீடுகளும் தலா 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியில் நிர்மாணிக்கபட்டு வருகின்றது

கருத்துகள் இல்லை: