செவ்வாய், 30 ஜூலை, 2013

அமெரிக்க இஸ்லாமிய பெண்ணியவாதி Amina Wadud யின் நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு


அமீனா வதூத். இவர் ஒரு இஸ்லாமிய மத அறிஞர். அமெரிக்காவில் பிறந்த கருப்பின பெண். இவரை இஸ்லாமிய பெண்ணியவாதி என்றும் இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஈடி கல்லூரியில் அமீனா வதூத் திங்கள் மாலை ஒரு சொற்பொழிவு ஆற்றுவதா இருந்துச்சு. இந்த நிகழ்ச்சியையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தன் தொண்டர்களை வைச்சு, போன் மூலமா கல்லூரி நிர்வாகத்துக்கும், சென்னை பல்கலைக்கழகத்துக்கும் மிரட்டல் விடுத்துருக்காங்க.இதுக்கு பாதுகாப்பு குடுக்க வேண்டிய காவல்துறை, இந்த மிரட்டலுக்கு பயந்து, நிகழ்ச்சியை ரத்து பண்ண வச்சுட்டாங்க.. ஜனநாயகத்தின் குரல்வளையை இது போன்ற மத அடிப்படைவாதிகள் நெறிக்கறதை ஏன் ஜெயலலிதா அனுமதிக்கிறாங்கன்னு தெரியலை. விஸ்வரூபம் விவகாரத்துல ஜெயலலிதா எடுத்த தவறான முடிவு, இந்த அடிப்படைவாதிகளோட வளர்ச்சிக்கு பெரிய உறுதுணையா இருந்துக்கிட்டு இருக்கு.
அழைக்கலாம். இஸ்லாமியப் பெண்ணாக இருந்து, தொழுகைகளை வழிநடத்தியதால், இமாம்களின் வெறுப்புக்கு ஆளானவர். பெண்கள் ஏன் இமாம் ஆகக்கூடாது என்ற கேள்வி எழுப்பியவர்.அமீனா வதூத் 2005ம் ஆண்டு அமெரிக்காவில், 60 பெண்களையும், 40 ஆண்களையும் ஒன்றாக அமரவைத்து தொழுகை நடத்தியவர். அதிலிருந்து இவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் பல்வேறு மிரட்டல்களை மத அடிப்படை வாதிகள் விடுத்து வந்தனர்.

கருத்துகள் இல்லை: